27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

அம்பத்தூர் தொழிற்பேட்டையில் சேதப்படுத்தப்பட்ட நடைபாதை! இவர்களை என்ன செய்யலாம்?

மழை வெள்ளம் தெரியாமல் யாராவது தவறி விழுந்துவிடுவார்களோ என்ற நிலையில் பொறுப்பற்று நடைபாதையிலேயே தோண்டப்பட்ட குழி...

News image

அம்பத்தூர் தொழிற்பேட்டை இரண்டாவது பிரதான சாலையில் சேதப்படுத்தப்பட்ட நடைபாதை. - Din

Updated On :16 அக்டோபர் 2024, 1:16 pm IST

சென்னை, அம்பத்தூர் தொழிற்பேட்டையில் இந்த பெரு மழைக்காலத்தில் நடைபாதையில் தோண்டப்பட்ட பள்ளத்தை அப்படியே சீர்செய்யாமல் விட்டுச் சென்றிருக்கின்றனர் சம்பந்தப்பட்ட கேபிள் நிறுவனத்தினர்.

இரண்டாவது பிரதான சாலையில், ஏதோ வேலை செய்த கேபிள் நிறுவனத்தினர், கற்களை மூடாமல் பள்ளத்தை அப்படியே விட்டுச் சென்றிருக்கின்றனர்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கனமழை பெய்து கொண்டிருக்கும் சூழலில், பார்வையற்றோர், முதியவர்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் நாள்தோறும் பயன்படுத்தும் இந்தச் சாலையைப் பயன்படுத்துகின்றனர்.

சாலையில் மழைத் தண்ணீர் பெருகியோடும் நிலையில், மக்கள் அனைவரும் நடைபாதையில்தான் செல்ல வேண்டியிருக்கிறது. இந்த நிலையில், நடைபாதையைத் தோண்டிப்போட்டுவிட்டுச் சென்றிருக்கின்றனர்.

தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப அலுவலகங்கள் என எண்ணற்ற நிறுவனங்கள் செயல்படும் அம்பத்தூர் தொழிற்பேட்டைப் பகுதிக்கு, நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையம் அருகே இரண்டாவது பிரதான சாலையில் உள்ள நடைபாதையில் போடப்பட்டுள்ள கற்கள் இரண்டு நாள்களுக்கு முன்னதாக கேபிள் பதிப்பதற்காக அகற்றப்பட்டன.

ஆனால், முறையாக வேலையை முடிக்காமல் இந்த மழைக்காலத்தில் கேபிள்கள் வெளியே தெரியும் வகையில், கற்களை மீண்டும் மூடாமல் அப்படியே விட்டுச் சென்றுள்ளது கேபிள் நிறுவனம்.

அம்பத்தூர் தொழிற்பேட்டை இரண்டாவது பிரதான சாலையில் சேதப்படுத்தப்பட்ட  நடைபாதை.

அம்பத்தூர் தொழிற்பேட்டை இரண்டாவது பிரதான சாலையில் சேதப்படுத்தப்பட்ட நடைபாதை. - Din

தவிர, இதே சாலையின் இதே நடைபாதையில் நெடுகிலும் மழை நீர் வடிவதற்காக உள்ள வடிகால் பள்ளங்களின் மூடிகளும் உருக்குலைந்து, வாய் திறந்து கிடக்கின்றன. சற்று கவனிக்காவிட்டாலும் எப்போது வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் உள்ளே தடுமாறி விழுந்து காயமுற நேரிடலாம். மழை மேலும் தொடரும் நிலையில், இதுபோன்ற பள்ளங்கள் மிகவும் கவனம் செலுத்தப்பட வேண்டியவை என்பது குறிப்பிடத் தக்கது. கவனிப்பார்களா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.