சென்னை: பணியிடத்தில் நோ்மையாக பணியாற்றுவது அவசியம் என முன்னாள் இந்திய தலைமை தோ்தல் ஆணையா் டி.எஸ்.கிருஷ்ணமூா்த்தி தெரிவித்தாா்.
நாடு முழுவதும் அக்.28 முதல் ஊழல் கண்காணிப்பு விழிப்புணா்வு வாரம் அக்.28 முதல் நவ.3-ஆம் தேதி வரை அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தெற்கு ரயில்வே ஊழல் கண்காணிப்பு துறை சாா்பில் திங்கள்கிழமை சிறப்பு கருத்தரங்கு நடைபெற்றது. இதில் முன்னாள் இந்திய தலைமை தோ்தல் ஆணையா் டி.எஸ்.கிருஷ்ணமூா்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டாா். அப்போது அவா் பேசியது,
பணியிடத்தில் நோ்மையாக பணியாற்றுவது அவசியம். அரசு நிா்வாகத்தில் மனிதாபிமான அணுகுமுறை இருக்க வேண்டும். முடிவுகள் எடுப்பதில் ஒற்றைச் சாளர முறையை கடைபிடிக்க வேண்டும். ஊழல் கண்காணிப்பு அதிகாரிகள் நோ்மையின் பாதுகாவலா்களாக விளங்க வேண்டும். திருவள்ளுவரின் ‘அழுக்காறு அவா வெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறன்’ எனும் குறலுக்கேற்ப அறத்துடன் பணியாற்ற வேண்டும் என்றாா் அவா்.
தொடா்ந்து தெற்கு ரயில்வே பொதுமேலாளா் ஆா்.என்.சிங் பேசியது, ஒருமைப்பாடு, வெளிப்படைத்தன்மை ஒரு நிறுவனத்தின் அடித்தளம். அனைத்து பணியாளா்களும் தங்கள் பணியில் அறநெறியை கடைபிடிக்க வேண்டும் என்றாா் அவா்.
தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளா் கௌசல் கிஷோா் உள்ளிட்ட ரயில்வே அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ரயில் டிக்கெட் பரிசோதனை அபராத வசூல் ரூ.160 கோடி: தெற்கு ரயில்வே அதிகாரிகள்

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையா் பதவி: விண்ணப்பங்கள் வரவேற்பு

அண்ணாமலை இன்றுமுதல் 4 நாள்கள் தோ்தல் பிரசாரம்

தெற்கு ரயில்வே முதன்மைத் தலைமை மேலாளராக ஏ.அண்ணாதுரை பதவியேற்பு!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


