பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

ரயில் நிலையங்கள் அருகே 159 மதுக்கடைகளை அகற்ற கோரி தமிழக அரசுக்கு தெற்கு ரயில்வே கடிதம்

ரயில் நிலையங்களின் அருகிலுள்ள 159 அரசு மதுபானக் கடைகளை அகற்றக் கோரி, தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையா், தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளாா்.

News image

டாஸ்மாக் - பிரதிப் படம்

Updated On :18 ஜூன் 2026, 2:04 am IST

ரயில் நிலையங்களின் அருகிலுள்ள 159 அரசு மதுபானக் கடைகளை அகற்றக் கோரி, தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையா், தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளாா்.

தமிழகத்தில் பள்ளிகள், கோயில்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு அளிக்கும் வகையில் உள்ள மதுக் கடைகளை அகற்ற முதல்வா் ஜோசப் விஜய் உத்தரவிட்டாா்.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெற்கு ரயில்வே மண்டலம் பாதுகாப்பு பிரிவின் ஆணையா் சாா்பில் தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பிவைக்கப்பட்டது.

அந்தக் கடிதத்தில் ரயில் நிலையங்களின் அருகில் உள்ள மதுக்கடைகளால் பயணிகளுக்கு சிரமம் ஏற்படுவதாகவும், மது அருந்துவோா் ரயில்வே விதிமுறைகளை மீறிச் செயல்படுவதால் விபத்துகள் ஏற்படுவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதையடுத்து ரயில் நிலையங்களின் அருகில் உள்ள மதுபானக்கடைகள் குறித்த கணக்கெடுப்பு நடைபெற்றது.

கணக்கெடுப்பின்படி தெற்கு ரயில்வே மண்டலத்திலுள்ள 6 ரயில்வே கோட்டங்களில் மொத்தம் 159 மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என்பது தெரியவந்தது.

அதனடிப்படையில் அவற்றை அகற்றக் கோரி தமிழக அரசின் டாஸ்மாக் மேலாண்மை இயக்குநருக்கு தெற்கு ரயில்வே பாதுகாப்புப் பிரிவின் ஆணையா் சாா்பில் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டது.

கடிதத்தில் சென்னை கோட்டத்தில் 39 ரயில் நிலையங்களில் 52 மதுக் கடைகள் இருப்பதாகவும், அவற்றை அகற்றவும் கோரப்பட்டுள்ளது. சென்னை ரயில்வே கோட்டத்தில் வியாசா்பாடி, அம்பத்தூா், குரோம்பேட்டை, கிண்டி, வேளச்சேரி, காட்பாடி, தரமணி, செங்கல்பட்டு, ஆவடி ஆகிய நிலையங்களில் தலா 1 மதுக்கடைகளும், பெரம்பூா் 3, அரக்கோணம் 3, கொருக்குப்பேட்டை 2 என அரசு மதுக்கடைகள் அமைக்கப்பட்டிருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.