ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

2 நாள்களுக்கு ரயில்வே நடைபாதை டிக்கெட் விற்கப்படாது!

ரயில் நிலையங்களில் அக். 29, 30 ஆகிய 2 நாள்களுக்கு நடைபாதை டிக்கெட் விற்கப்படாது

News image

கோப்புப் படம்

Updated On :28 அக்டோபர் 2024, 4:21 pm

தீபாவளி பண்டிகையை ஒட்டி மக்கள் அதிகளவில் ஊர்களுக்குச் செல்வார்கள் என்பதால் ரயில் நிலையங்களில் அக். 29, 30 ஆகிய 2 நாள்களுக்கு நடைபாதை டிக்கெட் விற்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், பெரம்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் நடைபாதை டிக்கெட் விற்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே நடைபாதை டிக்கெட் என்பது ரயில் நிலையத்துக்கு வரும் கூட்டத்தை சமாளித்து, அதிகாரப்பூர்வமுள்ள நபர்கள் மட்டுமே நடைபாதைகளை பயன்படுத்துவதை உறுதி செய்வதற்கு மிகவும் அவசியமானது.

இந்நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி ரயில்வே நடைபாதைகளில் டிக்கெட் விற்கப்படாது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதன்படி, சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், பெரம்பூர் ரயில் நிலையங்களில் நடைபாதை டிக்கெட் தேவைப்படாது.

பண்டிகையையொட்டி கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், மூத்த குடிமக்கள், பெண்கள் பயன்பெறும் வகையில், நடைபாதை டிக்கெட் கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.