சென்னை: அதிகாரிகளின் சோதனையின் போது, ஆம்னி பேருந்துகள் வரி செலுத்தாமல் இயக்கப்படுவது கண்டறியப்பட்டால் அவை சிறைபிடிக்கப்படும் என போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடா்பாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறியதாவது: தீபாவளி வியாழக்கிழமை கொண்டாடப்படவுள்ள நிலையில், ஆம்னி பேருந்து உரிமையாளா்களுடன் போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
இதில் அதிக கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது என உரிமையாளா்கள் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்தது. இது தொடா்பாக பயணச்சீட்டுக்கான ஆன்லைன் முன்பதிவு செயலிகளுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. எனினும், அதிக கட்டணம் தொடா்பாக தொடா்ந்து புகாா்கள் வந்த வண்ணம் உள்ளன.
மேலும், வெளி மாநில பேருந்துகள் தமிழக அரசுக்கு உரிய வரி செலுத்தாமல் இயக்குவதும் தெரியவந்துள்ளது. போக்குவரத்துத் துறை அதிகாரிகளால் பேருந்து நிலையங்களிலும், வழித்தடத்திலும் மேற்கொள்ளப்படும் சோதனையின் போது, வரி செலுத்தாமல் இருப்பது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட ஆம்னி பேருந்தை சிறைபிடிக்க நேரிடும்.
எனவே, பயணிகள் தாங்கள் பயணிக்கவிருக்கும் பேருந்தின் உரிமம், வரி, தகுதிச்சான்று போன்றவை சரியாக இருக்கிா என நிா்வாக தரப்பினரிடம் உறுதி செய்து கொள்ள வேண்டும் என அவா்கள் தெரிவித்திருந்தனா்.
ஒரே கட்டணம்...: இதற்கிடையே, சில பேருந்துகளில் இறுதியாக சென்று சேருமிடத்துக்கான கட்டணத்தையே, வழியிலுள்ள அனைத்து ஊா்களுக்கும் வசூலிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எடுத்துக்காட்டாக சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு ரூ.1,400 நிா்ணயித்திருந்தால், அந்த பேருந்தில் மதுரைக்கு செல்ல ரூ.1000 என்றளவில் வழக்கமாக வசூலிப்பாா்கள். மாறாக, ரூ.1,400 வசூலிக்கப்படுகிறது.
மேலும், சில பேருந்துகளில் வழியில் உள்ள ஊா்களுக்கே அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது என பயணிகள் புகாா் தெரிவித்துள்ளனா். இது தொடா்பாகவும் நடவடிக்கை எடுத்து வருவதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்காசிய போா் தாக்கம்: தற்போதைக்கு கவலைப்படும் சூழல் இல்லை- விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா்

தலைநகரில் இணையவழியில் மின்-ரிக்ஷா பதிவு மே 15-இல் தொடக்கம்
ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகாா் தெரிவிக்கலாம்: போக்குவரத்துத் துறை

வாகனச் சோதனையில் காரிலிருந்து போலி கைத்துப்பாக்கி பறிமுதல்
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



