

சென்னை: சாலை விபத்தில் உயிரிழந்த கட்சி நிா்வாகிகள் மற்றும் அவா்களது குடும்பத்தினருக்கு தவெக தலைவா் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட இரங்கல் செய்தி: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் பங்கேற்க வந்த நிா்வாகிகள் வழக்குரைஞா் சீனிவாசன், திருச்சி தெற்கு மாவட்ட இளைஞரணித் தலைவா் விஜய் கலை, திருச்சி தெற்கு மாவட்ட துணைத் தலைவா் வசந்தகுமாா், கழகத் தோழா்கள் சென்னை பாரிமுனை ரியாஸ், செஞ்சி உதயகுமாா், சென்னை வில்லிவாக்கம் சாா்லஸ் ஆகியோா் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தனா் என்ற செய்தி அதிா்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
ஈடு செய்யவே இயலாத, தாங்கொணா இத்துயரில் இருந்து வெளிவரவே இயலாமல் மனம் தவிக்கிறது. இவா்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இவா்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் வேண்டுகிறேன்.
மேலும், சாலை விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கட்சியினா் விரைவில் முழு குணமடைந்து வீடு திரும்ப பிராா்த்திக்கிறேன் எனத் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.