தாம்பரம் - நாகர்கோவில், மங்களூரு ரயில்கள் தாமதமாகப் புறப்படும்!

நாகர்கோவில் விரைவு ரயில் 1 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்
தாம்பரம் - நாகர்கோவில், மங்களூரு ரயில்கள் தாமதமாகப் புறப்படும்!
ANI
Published on
Updated on
1 min read

தீபாவளி விடுமுறையையொட்டி சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களின் வசதிக்காக தாம்பரம் - நாகர்கோவில் விரைவு ரயில் 1 மணி நேரம் தாமதமாகப் புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சற்று முன் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், தாம்பரம் - நாகர்கோவில் விரைவு ரயில் (20691) தாம்பரத்திலிருந்து இன்றிரவு 11 மணிக்குப் பதிலாக 1 மணி நேரம் தாமதமாக நள்ளிரவு 12 மணிக்குப் புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, தாம்பரம் - மங்களூரு செண்ட்ரல் விரைவு ரயில் (20691) தாம்பரத்திலிருந்து இன்றிரவு 11.50 மணிக்குப் பதிலாக 1 மணி நேரம் தாமதமாக நள்ளிரவு 12.50 மணிக்குப் புறப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com