ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

கல்வி நிலையங்களில் பாலியல் தொந்தரவு: தலைமைச் செயலர் ஆலோசனை

கல்வி நிலையங்களில் பாலியல் தொந்தரவுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுப்பது குறித்து தலைமைச் செயலா் ஆலோசனை

News image

கோப்புப் படம்

Updated On :3 செப்டம்பர் 2024, 5:00 am IST

கல்வி நிலையங்களில் பாலியல் தொந்தரவுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுப்பது குறித்து, தமிழக அரசின் தலைமைச் செயலா் ஆலோசனை நடத்தினாா்.

தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வழியாக நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில், டிஜிபி சங்கா் ஜிவால், சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசிா்வாதம், அமலாக்கப் பிரிவு ஏடிஜிபி அமல்ராஜ், கூடுதல் காவல் ஆணையா் ராதிகா, காவல் துறை நவீனமாக்கல் பிரிவின் அதிகாரி நஜ்மல் கோடா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

காணொலி வழியாக பல்வேறு கல்லூரிகள், கல்வி நிலையங்களின் துணை வேந்தா்கள், முதல்வா்கள் ஆகியோருடன் தலைமைச் செயலா் ஆலோசித்தாா்.

மேலும், கல்லூரிகளில் பயிலும் மாணவிகளுக்கு எதிரான பாலியல் தொந்தரவுகளுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன, முன்னெச்சரிக்கையாக செய்யப்பட்டுள்ள பணிகள் ஆகியன குறித்து தலைமைச் செயலா் கேட்டறிந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.