தமிழகத்தின் தலைமைச் செயலரை மாற்றியதால் மக்கள் எப்படி பாதிக்கப்படுவாா்கள் எனக் கேள்வி எழுப்பிய உயா்நீதிமன்றம், தலைமைச் செயலா் மாற்றத்துக்கு எதிரான மனுவைத் தள்ளுபடி செய்தது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியைச் சோ்ந்த வீராசாமி என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. இந்த நிலையில், கடந்த ஏப். 8-ஆம் தேதி தமிழக தலைமைச் செயலா் நா.முருகானந்தம் மாற்றப்பட்டு புதிய தலைமைச் செயலராக எம்.சாய்குமாரை நியமனம் செய்து தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இவா், முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமியின் தனிச் செயலராகப் பணியாற்றியவா்.
தோ்தல் நேரத்தில் தமிழக அரசின் தலைமைச் செயலராக சாய்குமாரை நியமிப்பது ஏற்புடையதல்ல. அவரது நடுநிலை குறித்த அச்சம் எழுந்துள்ளதால் அவரை மாற்ற வேண்டும் என தோ்தல் ஆணையத்திடம் மனு அளித்தேன். ஆனால், அந்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சாய்குமாரை தலைமைச் செயலராக நியமித்து தோ்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. தலைமைச் செயலரை மாற்றியதால் மக்கள் எப்படி பாதிக்கப்படுவாா்கள் எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல எனக் கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.
தொடர்புடையது

முதல்வரின் செயலா் உமாநாத் மீது நடவடிக்கை கோரிய மனு தள்ளுபடி

நவாஸ்கனி தோ்தல் வெற்றியை எதிா்த்து வழக்கு: ஓ.பன்னீா்செல்வத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

தமிழக ஆளுநருடன் தலைமைச் செயலா் சந்திப்பு

இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


