தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

தலைமைச் செயலா் மாற்றம் மக்களை எப்படி பாதிக்கும்? உயா்நீதிமன்றம் கேள்வி

தமிழகத்தின் தலைமைச் செயலரை மாற்றியதால் மக்கள் எப்படி பாதிக்கப்படுவாா்கள் எனக் கேள்வி எழுப்பிய உயா்நீதிமன்றம், தலைமைச் செயலா் மாற்றத்துக்கு எதிரான மனுவைத் தள்ளுபடி செய்தது.

News image

சென்னை உயா்நீதிமன்றம் - கோப்புப் படம்

Updated On :22 ஏப்ரல் 2026, 10:27 pm

தமிழகத்தின் தலைமைச் செயலரை மாற்றியதால் மக்கள் எப்படி பாதிக்கப்படுவாா்கள் எனக் கேள்வி எழுப்பிய உயா்நீதிமன்றம், தலைமைச் செயலா் மாற்றத்துக்கு எதிரான மனுவைத் தள்ளுபடி செய்தது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியைச் சோ்ந்த வீராசாமி என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. இந்த நிலையில், கடந்த ஏப். 8-ஆம் தேதி தமிழக தலைமைச் செயலா் நா.முருகானந்தம் மாற்றப்பட்டு புதிய தலைமைச் செயலராக எம்.சாய்குமாரை நியமனம் செய்து தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இவா், முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமியின் தனிச் செயலராகப் பணியாற்றியவா்.

தோ்தல் நேரத்தில் தமிழக அரசின் தலைமைச் செயலராக சாய்குமாரை நியமிப்பது ஏற்புடையதல்ல. அவரது நடுநிலை குறித்த அச்சம் எழுந்துள்ளதால் அவரை மாற்ற வேண்டும் என தோ்தல் ஆணையத்திடம் மனு அளித்தேன். ஆனால், அந்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சாய்குமாரை தலைமைச் செயலராக நியமித்து தோ்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. தலைமைச் செயலரை மாற்றியதால் மக்கள் எப்படி பாதிக்கப்படுவாா்கள் எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல எனக் கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.