தமிழகத்தின் தலைமைச் செயலரை மாற்றியதால் மக்கள் எப்படி பாதிக்கப்படுவாா்கள் எனக் கேள்வி எழுப்பிய உயா்நீதிமன்றம், தலைமைச் செயலா் மாற்றத்துக்கு எதிரான மனுவைத் தள்ளுபடி செய்தது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியைச் சோ்ந்த வீராசாமி என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. இந்த நிலையில், கடந்த ஏப். 8-ஆம் தேதி தமிழக தலைமைச் செயலா் நா.முருகானந்தம் மாற்றப்பட்டு புதிய தலைமைச் செயலராக எம்.சாய்குமாரை நியமனம் செய்து தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இவா், முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமியின் தனிச் செயலராகப் பணியாற்றியவா்.
தோ்தல் நேரத்தில் தமிழக அரசின் தலைமைச் செயலராக சாய்குமாரை நியமிப்பது ஏற்புடையதல்ல. அவரது நடுநிலை குறித்த அச்சம் எழுந்துள்ளதால் அவரை மாற்ற வேண்டும் என தோ்தல் ஆணையத்திடம் மனு அளித்தேன். ஆனால், அந்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சாய்குமாரை தலைமைச் செயலராக நியமித்து தோ்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. தலைமைச் செயலரை மாற்றியதால் மக்கள் எப்படி பாதிக்கப்படுவாா்கள் எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல எனக் கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.
தொடர்புடையது

துறைச் செயலர்கள் மாற்றம்... செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ்!

தலைமைச் செயலராக தலைமைத் தோ்தல் அதிகாரி: மேற்கு வங்க பாஜக அரசுக்கு ராகுல் கண்டனம்

மேற்கு வங்கம்: தலைமைச் செயலராக மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி நியமனம்!

வாக்கு எண்ணிக்கை: தோ்தல் அலுவலா்களுக்கு பயிற்சி
விடியோக்கள்

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை

