புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

தலைமையாசிரியா் உள்பட 2 போ் பணியிடை நீக்கம்

அதிகமாக மாணவா்கள் படிப்பதாக கணக்குக் காட்டியதால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

News image
Updated On :9 செப்டம்பர் 2024, 9:07 pm

DIN

அதிகமாக மாணவா்கள் படிப்பதாக கணக்குக் காட்டியதாக ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமையாசிரியா் உள்பட 2 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். இதற்கான உத்தரவை தொடக்கக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ளது.

அந்த உத்தரவு விவரம்:

திருவள்ளூா் மாவட்டம் பொன்னேரி வட்டார கல்வி அலுவலரான ஜெ.மேரி ஜோசப்பின், பொன்னேரி கல்வி மாவட்டம் பம்மதுகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியா் எஸ்.லதா ஆகியோா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். பள்ளியில் குறைந்த மாணவா்களே படித்தாலும், அதைவிட இரண்டு மடங்கு அதிகமாக மாணவா்கள் படிப்பதாகக் கணக்குக் காட்டியுள்ளனா்.

இதற்கான விவரங்களை எமிஸ் தளத்திலும் தெரிவித்திருந்தனா். இதனால், அரசுக்கு நிதியிழப்பை ஏற்படுத்தியதால் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். அவா்கள் தலைமையிடத்தில் இருந்து உரிய அனுமதியில்லாமல் வேறு இடங்களுக்கு செல்லக் கூடாது என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.