அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

தேமுதிக அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துமா தவெக மாநாடு? விஜய பிரபாகரன் பதில்

விஜய் கட்சியின் மாநாடு குறித்து தேமுதிக தலைவர் விஜய பிரபாகரன் பதில்..

News image
Updated On :9 செப்டம்பர் 2024, 3:14 pm

DIN

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம்(தவெக) என்ற பெயரில் தொடங்கியுள்ள அரசியல் கட்சியின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டத்தின் விக்கிரவாண்டியில் செப்டம்பர் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்த நிலையில், தவெக மாநாடு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துமா? என்ற கேள்விக்கு தேமுதிக தலைவர் விஜய பிரபாகரன் பதில் அளித்துள்ளார்.

விஜய பிரபாகரன்

விஜய பிரபாகரன்

இது குறித்து செய்தியாளர்கல் எழுப்பிய கேள்விக்கு திங்கள்கிழமை(செப். 9) விஜய பிரபாகரன் கூறியதாவது, “மதுரையில் 2005-இல் கேப்டன்(விஜயகாந்த்) நடத்திய மாநாட்டுக்கு பிறகு, பிறர் நடத்திய, நடத்துகிற மாநாடு எந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் எனத் தெரியவில்லை.

விஜய் அண்ணா மாநாட்டை நடத்திய பிறகு அதைப் பற்றி கேளுங்கள். அப்போது அதற்கு பதிலளிப்பதே சரியாக இருக்கும்.”

“மதுரையில் நடைபெற்ற தேமுதிக மாநாட்டில் குறைந்தபட்சம் 35 லட்சம் பேர் திரண்டிருந்தனர். தொண்டர்கள் கேப்டனுக்காக தமிழ்நாடு முழுவதும் பல நூறு கி.மீ. தூரத்துக்கு பேனர்கள் வைத்திருந்தனர். மாநாட்டுக்கு வருகை தந்திருந்த 35 லட்சம் பேருக்கும் கேப்டன் உணவு வழங்கியிருந்தார். அதுமட்டுமல்லாமல் 35 லட்சம் பேரும் பத்திரமாக தங்கள் வீடுகளுக்குச் சென்று சேர்ந்தனர். இந்த மாதிரி வரலாறு மிக்கதொரு மாநாட்டை தேமுதிக 2005-இல் நடத்தியுள்ளது.

இந்த நிலையில், தேமுதிகவுக்கு இணையாக விஜய் அண்ணாவால் மாநாட்டை நடத்த முடியுமா? என்பது, அவர் மாநாட்டை நடத்திய பிறகே தெரியும். ஆகவே, சகோதரர் விஜய் அண்ணனுக்கும், தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்களுக்கும் தேமுதிக சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பேசியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.