ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தொழில் திட்டங்களுக்கு ரூ.100 கோடி வரை அடமானம் இல்லாமல் நிதி!

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், தொழில்துறையினருடன் சந்திப்பு இன்று நடைபெற்றது.

News image
கோவை விமான நிலையத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
Updated On :11 செப்டம்பர் 2024, 2:36 pm

DIN

தொழில் திட்டங்களுக்கு ரூ.100 கோடி வரை அடமானம் இல்லாமல் நிதி வழங்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (செப். 11) தெரிவித்தார்.

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், தொழில்துறையினருடன் சந்திப்பு இன்று (செப். 11) மாலை நடைபெற்றது.

முன்னதாக கோவையில் இன்று காலை ஜி.எஸ்.டி., வருமான வரி, வங்கி மற்றும் காப்பீடு, துணி, தோல் உள்ளிட்ட துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தின் முடிவில் தொழில்துறை பிரதிநிதிகளின் கோரிக்கைகள், தொகுக்கப்பட்டு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களுடன் அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது, ரூ. 100 கோடி வரை தொழில் திட்டங்களுக்கு அடமானம் இல்லாமல் சுயநிதி தர முடிவு செய்யப்படுள்ளதாகக் கூறினார்.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் கிரெடிட் உத்தரவாத நிதி உருவாக்கம் என கோவைக்கு பல்வேறு சிறப்புத் திட்டங்கள் கொடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

30 குறு நிறுவனங்களுக்கு ரூ. 103 கோடி நிதி கொடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி (எஸ்.ஐ.டி.பி.ஐ.) கோவை கிளையில் 2024ஆம் ஆண்டில் ரூ.491 கோடி அனுமதிக்கப்பட்டு ரூ. 314 கோடி தரப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

ஜி.எஸ்.டி. குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ஜி.எஸ்.டி.யில் மாறுதல்கள் செய்யும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.