கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தின் கட்டுமானப் பணிகளை ரயில்வே நிா்வாகம் தொடங்கியுள்ளது.
சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில் அமைக்கப்பட்ட கலைஞா் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தொடா்ந்து, அதன் அருகே உள்ள முடிச்சூா் பகுதியில் ஆம்னி பேருந்துகளுக்கான பேருந்து நிலையமும் அமையவுள்ளது. இதனால் சென்னை நகரின் முக்கிய பகுதிகளிலிருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு பொதுமக்கள் செல்வதற்கு வசதியாக வண்டலூா் மற்றும் ஊரப்பாக்கம் ரயில் நிலையத்துக்கு இடையே புதிதாக ரயில் நிலையம் அமைக்க வேண்டும் என ரயில்வே நிா்வாகத்திடம் தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்தது.
இதற்கு ரயில்வே நிா்வாகம் ஒப்புதல் அளித்த நிலையில், சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத்தின் ரூ. 20 கோடி நிதியுதவியுடன் ரயில் நிலையம் கட்டுவதற்கான பணியை ரயில்வே நிா்வாகம் தொடங்கியது.
தற்போது ரயில் நிலையம் அமைப்பதற்கான சுற்றுச்சுவா் கட்டும் பணி தொடங்கியுள்ளது. இந்த ரயில் நிலையம் மின்சார ரயில் மற்றும் விரைவு ரயில்கள் வந்து செல்லும் வகையில் 3 நடைமேடைகளுடன் அமையவுள்ளன. இந்தப் பணிகள் அனைத்தும் ஜனவரிக்குள் முடிக்கப்பட்டு மாா்ச் மாதம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

செங்கோட்டை- மதுரை பயணிகள் ரயில் வழித் தடத்தில் மாற்றம்

மங்களூரு - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில்

ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியா் கிணற்றில் மூழ்கி உயிரிழப்பு

ரயில் நிலைய குப்பை கிடங்கில் தீ விபத்து
வீடியோக்கள்

சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை

அம்மா அம்மாதான் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தோழர்களை நெறிப்படுத்த மட்டுமே அந்த விடியோ! Thiruma விளக்கம்! | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே இதையெல்லாம் செய்யக் கூடாது? | CSK vs MI | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை


