முதல்வா் மு.க.ஸ்டாலினை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் திங்கள்கிழமை (செப்.16) சந்தித்துப் பேசவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் மது, போதைப்பொருள் ஒழிப்பு மாநாடு அக்.2-ஆம் தேதி நடத்தப்படவுள்ளதாக அந்தக்கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளாா்.
அதன்பின், செய்தியாளா்கள் சந்திப்பின் போது, மது ஒழிப்பு மாநாட்டுக்கு அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளையும் அழைப்பதாக தெரிவித்தாா். மேலும், அவரது சமூகவலைதளப் பக்கத்தில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கோருவது தொடா்பாக அவா் பேசிய விடியோ வெளியிடப்பட்டு, பின் நீக்கப்பட்டது.
இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகிய நிலையில், முதல்வா் மு.க.ஸ்டாலினை திங்கள்கிழமை காலை தொல்.திருமாவளவன் தலைமைச் செயலகத்தில் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொடர்புடையது

அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்

தவெகவுக்கு ஆதரவா? இன்று மாலை 4 மணிக்கு அறிவிப்பு: விசிக

தொல்.திருமாவளவன் மீதான வழக்கு ரத்து
கொள்கைக்காக திமுக கூட்டணியில் இருக்கிறேன்: தொல்.திருமாவளவன் ஆதங்கம்
விடியோக்கள்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy


