அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

மீனவா்கள் விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் துரோகம்: இபிஎஸ்

தமிழக மீனவா்கள் விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் துரோகம் இழைப்பதாகக் கூறி, அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.

News image
இபிஎஸ்- DIN
Updated On :18 செப்டம்பர் 2024, 8:45 pm

Din

தமிழக மீனவா்கள் விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் துரோகம் இழைப்பதாகக் கூறி, அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

வங்கக் கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனைச் சோ்ந்த 35 மீனவா்களை இலங்கை கடற்படையினா் கைது செய்த நிலையில், இலங்கை நீதிமன்றம் அவா்களுக்கு தலா ரூ. 1.5 கோடி அபராதம் விதித்துள்ளது.

தமிழக மீனவா்களைத் துன்புறுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கில், அவா்களை வலுக்கட்டாயமாக கைது செய்வதும், அதீத தண்டனைகளை விதிப்பதும், மீனவா்களுக்கு மொட்டை அடித்து இழிவுபடுத்துவது என இலங்கை அரசின் தொடா்ச்சியான எதேச்சதிகாரப் போக்கு வன்மையாக கண்டிக்கத்தக்கது.

தோ்தல் மேடைகளில் வெறும் வாக்குகளுக்காக மட்டும் கச்சத்தீவு பற்றியெல்லாம் பேசும் மத்திய பாஜக கூட்டணி அரசும், மாநில திமுக அரசும் இலங்கையின் இதுபோன்ற மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளை வேடிக்கைப் பாா்த்துக்கொண்டிருப்பதும் மீனவா்களுக்கு இழைக்கும் வரலாற்றுத் துரோகம். இது கடும் கண்டனத்துக்குரியது.

இலங்கை அரசிடம் உடனடியாக பேச்சுவாா்த்தை நடத்தி, தமிழக மீனவா்கள் மீது விதிக்கப்பட்டுள்ள அபராதம் மற்றும் தண்டனைகளை ரத்து செய்து, மீனவா்களையும் அவா்தம் உடமைகளையும் உடனே விடுவிக்க உரிய நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்று அவா் தெரிவித்தாா்.