தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் தொடக்க விழா ஒத்திவைப்பு! தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் தொடக்க விழா ஒத்திவைப்பு! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 குறைவு! பாதுகாப்பான 6ஜி வலையமைப்பு: அமெரிக்க முன்னெடுப்பில் இணைந்த இந்தியா பிகாரில் அதிகரிக்கும் வெள்ளம்; 35 லட்சம் பேர் பாதிப்பு 22 மொழிகளில் திருக்குறள்: "பன்மொழிச் செயலி' இன்று வெளியீடு ஜாகுவாா் லேண்ட்ரோவரில் 4,000 பணியிடங்கள் குறைப்பு சட்டப் படிப்புகளின் கால அளவு மறுஆய்வு: நிபுணர் குழு அமைப்பு அவசியம்; உச்சநீதிமன்றம்

சென்னையில் இருந்து புறப்பட்ட விமானத்தின் கதவை திறக்க முயன்ற பயணி!

ஓடும் விமானத்தின் கதவை பயணி திறக்க முயன்றது பற்றி...

இண்டிகோ விமானம் - கோப்புப்படம்

Published On :

சென்னையில் இருந்து வியாழக்கிழமை இரவு புறப்பட்ட விமானத்தின் கதவை பயணி திறக்க முயற்சித்துள்ளார்.

இதனைக் கண்டு பதற்றம் அடைந்த விமானிகள் உடனடியாக விமானத்தை ஓடுதளத்திலேயே அவசரமாக நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கதவை திறக்க முயற்சி

சென்னையில் இருந்து மும்பை விமான நிலையத்துக்கு வியாழக்கிழமை இரவு 10.30 மணிக்கு இண்டிகோ விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் புறப்பட்டுள்ளது.

இந்த விமானம் ஓடுதளத்தில் இருந்து பறப்பதற்கு தயாரான நிலையில், மும்பையைச் சேர்ந்த வருண் பாரத் என்ற இளைஞர், விமானத்தின் அவசரகால கதவின் பொத்தானை அழுத்தியுள்ளார்.

இதனைக் கண்ட விமானிகள், ஓடுதளத்திலேயெ விமானத்தை நிறுத்தியதால், சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தெரியாமல் அவசர கால கதவின் பொத்தானை அழுத்தியதாக விளக்கம் அளித்த இளைஞரை காவல் துறையினர் கைது விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

இதனைத் தொடர்ந்து, தொழில்நுட்ப வல்லுநர்கள் விமானத்தை சோதனை செய்த பிறகு, ஒன்றரை மணிநேரம் தாமதமாக மும்பைக்கு புறப்பட்டுச் சென்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.