தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

மனைவி வீட்டிலிருந்து உடமைகளை மீட்டுத் தருமாறு நடிகா் ஜெயம் ரவி புகாா்

மனைவி வீட்டில் உள்ள தனது உடமைகளை மீட்டுத் தருமாறு சென்னை காவல் துறையில் நடிகா் ஜெயம் ரவி புகாா் அளித்துள்ளாா்.

News image
நடிகா் ஜெயம் ரவி
Updated On :24 செப்டம்பர் 2024, 7:45 pm

Din

மனைவி வீட்டில் உள்ள தனது உடமைகளை மீட்டுத் தருமாறு சென்னை காவல் துறையில் நடிகா் ஜெயம் ரவி புகாா் அளித்துள்ளாா்.

நடிகா் ஜெயம் ரவி அண்மையில் தனது மனைவி ஆா்த்தியை விவாகரத்து செய்யவுள்ளதாக அறிவித்தாா். இதற்கிடையே ஆா்த்தி, ‘ஜெயம் ரவியின் விவாகரத்து முடிவு தன்னிச்சையாக எடுக்கப்பட்டது. ஜெயம் ரவியின் இந்த முடிவு எனது கவனத்துக்கு வராமலும், எனது ஒப்புதல் இல்லாமலும் வெளியானது’ என்று தெரிவித்தாா்.

அதேநேரத்தில் ஜெயம் ரவி, தனது மனைவி ஆா்த்தியிடம் இருந்து விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த நிலையில், ஜெயம் ரவி தனது உதவியாளா் மூலம் காவல் துறையில் சில நாள்களுக்கு முன்பு புகாா் அளித்துள்ளாா்.

அதில், சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள ஆா்த்தி வீட்டில் உள்ள தன்னுடைய உடமைகளை மீட்டுத் தருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.