முன்னாள் முதல்வர் கருணாநிதி படித்த பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று ஆய்வு மேற்கொண்டார்.
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி நாகை மாவட்டம் திருக்குவளையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் படித்தார்.
தமிழகம் முழுவதும் தொடர்ந்து பல்வேறு பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு வரும் தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று(செவ்வாய்க்கிழமை) திருக்குவளை பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், 'முன்னாள் முதல்வர் கருணாநிதி பயின்ற திருக்குவளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்தான், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ‘முதலமைச்சர் காலை உணவுத் திட்டத்தை’ 2-ஆம் கட்டமாக விரிவாக்கம் செய்தார்.
சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலியின் கீழ்வேளூர் தொகுதிக்குட்பட்ட இப்பள்ளியில் 234/77 ஆய்வுத் திட்டத்தின் கீழ் 193-ஆவது ஆய்வை இன்று மேற்கொண்டோம்' என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், திருக்குவளையில் கட்டப்பட்டு வரும் கலைஞர் மையத்தின் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார்.
'திருக்குவளையில் ‘முத்துவேலர் நூலகம் அஞ்சுகம் படிப்பகம்’ எனும் பெயரில் செயல்படும் கலைஞர் பிறந்த இல்லத்திற்கு அருகே கட்டப்பட்டு வரும் கலைஞர் மையத்தின் கட்டுமானப் பணிகளை, அஞ்சுகம் முத்துவேலர் அறங்காவலர் குழுவின் உறுப்பினர் எனும் முறையில் இன்று பார்வையிட்டோம்' என்று குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பள்ளிகள் திறப்பு தேதியைத் தள்ளிவைக்க வேண்டும் - அன்பில் மகேஸ்

கோவை சூலூர் சிறுமி கொலை: சம்பவ இடத்தில் தமிழக சட்டம்-ஒழுங்கு டிஜிபி ஆய்வு!
தேர்வு முடிவுகள் மட்டுமே வாழ்க்கை கிடையாது! பிளஸ் 2 மாணவர்களுக்கு அன்பில் மகேஸ் வாழ்த்து

அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!
விடியோக்கள்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy


