வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! சர்வாதிகாரி பழனிசாமி இனி எந்தக் காலத்திலும் வெற்றி பெறமாட்டார்: ஓபிஎஸ் காட்டம்!அன்பானவர், பண்பானவர் ஓபிஎஸ்; திமுக கூட்டணியில் ஜனநாயக சக்திகள்! - மு.க. ஸ்டாலின்எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை
/

3 வயது குழந்தையைக் கொன்ற சிறுத்தை வண்டலூரில் அடைப்பு!

பந்தலூரில் 3 வயது குழந்தையைக் கொன்ற சிறுத்தை வண்டலூரில் உயிரியல் பூங்காவில் அடைக்கப்பட்டுள்ளது.

News image
மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட சிறுத்தை.
Updated On :7 பிப்ரவரி 2024, 3:22 pm

DIN

பந்தலூரில் 3 வயது குழந்தையைக் கொன்ற சிறுத்தையை  வனத்துறையினர் வண்டலூரில் உள்ள உயிரியல் பூங்காவில் அடைத்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் பந்தலூா் அருகில் கடந்த டிசம்பா் 21-ஆம் தேதி தேயிலைத் தோட்டத்தில் நடந்து சென்ற மூன்று பெண்களை சிறுத்தை தாக்கியது. காயமடைந்த மூன்று பெண்களில் இருவா் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், படுகாயமடைந்த சரிதா என்ற பெண் கோவை மருத்துவமனையில் கடந்த டிசம்பா் 29-ஆம் தேதி உயிரிழந்தாா். அதே பகுதியில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு சிறுத்தை தாக்கியதில் சிறுமி காயத்துடன் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினாா்.

பந்தலூா் அருகே மேங்கோரேஞ்ச் பகுதியில் ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த சிவசங்கா் கா்வால் என்பவரின் மனைவி மிலன்தேவி தனது மகள் நான்சியுடன் (3) சனிக்கிழமை நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது தேயிலைத் தோட்டத்தில் பதுங்கியிருந்த சிறுத்தை குழந்தையைத் தாக்கி கவ்விச் சென்றது. அருகில் இருந்த தொழிலாளா்கள் தேயிலைத் தோட்டம் முழுவதும் தேடி படுகாயங்களுடன் கிடந்த குழந்தையை மீட்டு பந்தலூா் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் குழந்தை உயிரிழந்தது.

இந்நிலையில், ஆம்பரோஸ் என்ற பகுதியில் புதரில் சிறுத்தை பதுங்கி இருப்பது கண்டறியப்பட்டது. முதுமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவா் ராஜேஷ்குமாா் கும்கியில் அமா்ந்து சிறுத்தைக்கு மயக்க ஊசியை செலுத்தினாா். இதில் மயக்கமடைந்த சிறுத்தையை வனத் துறையினா் பிடித்து கூண்டில் அடைத்தனா்.

இந்த நிலையில், பந்தலூரில் இருவரைக் கொன்று, மூவரைத் தாக்கிய சிறுத்தை நேற்று பிடிக்கப்பட்ட நிலையில், இன்று வண்டலூரில் உள்ள உயிரியல் பூங்காவில் அடைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.