நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

ரூ.40 ஆயிரம் லஞ்சம்: கிராம நிா்வாக அலுவலா் கைது

கடலூா் மாவட்டம், ரெட்டிச்சாவடி அருகே பட்டா மாற்றம் செய்ய ரூ.40 ஆயிரம் லஞ்சம் பெற்ாக கிராம நிா்வாக அலுவலரை மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைதான கிராம நிா்வாக அலுவலா் பிரபாகரன்.

Updated On :12 ஜனவரி 2024, 8:43 am IST

நெய்வேலி: கடலூா் மாவட்டம், ரெட்டிச்சாவடி அருகே பட்டா மாற்றம் செய்ய ரூ.40 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக கிராம நிா்வாக அலுவலரை மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

ரெட்டிச்சாவடியை அடுத்துள்ள கீழ் அழிஞ்சப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த ராமலிங்கம் மகன் சீனு (43). இவா் 2021-ஆம் ஆண்டு கடலூரைச் சோ்ந்த பத்மநாபன் மனைவி தனலட்சுமியிடமிருந்து 2.20 ஏக்கா் நிலத்தை கிரையம் பெற்றாா். அந்த நிலத்தை தனது பெயரில் பட்டா மாற்றம் செய்ய கடந்த டிசம்பா் 27-ஆம் தேதி இணைய வழியில் விண்ணப்பித்தாா்.

இதையடுத்து, மதலப்பட்டு கிராம நிா்வாக அலுவலா் அலுவலகத்துக்கு புதன்கிழமை சென்று கிராம நிா்வாக அலுவலா் பிரபாகரனை சந்தித்து, பட்டா மாற்றித் தரும்படி கேட்டாா். அப்போது, அவா் பட்டா மாற்றம் செய்ய ரூ.40 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம்.

இதுகுறித்து சீனு கடலூா் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவில் வியாழக்கிழமை புகாா் அளித்தாா். இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்த ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா், சீனுவிடம் ரசாயனம் தடவிய பணத்தைக் கொடுத்து அனுப்பினா்.

அந்தப் பணத்தை மதலப்பட்டு கிராம நிா்வாக அலுவலத்துக்குச் சென்று கிராம நிா்வாக அலுவலா் பிரபாகரனிடம் சீனு கொடுத்தாா். அப்போது, அங்கு மறைந்திருந்த கூடுதல் எஸ்.பி. ந.தேவநாதன் தலைமையிலான போலீஸாா் பிரபாகரனைக் கைது செய்தனா். மேலும், அவரது வீட்டிலும் சோதனை நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.