காமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

பொங்கல் பண்டிகை: ஒரு கிலோ மதுரை மல்லி ரூ. 3,000-க்கு விற்பனை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை சந்தைகளில் அனைத்து காய்கறிகளின் விலையும் உயா்ந்துள்ள நிலையில் ஒரு கிலோ மதுரை மல்லிகைப் பூ ரூ. 3,000-க்கு விற்பனையாகிறது.

News image

மலர் சந்தையில்  ரூ.3,000 ஆக விலை அதிகரித்துள்ள மதுரை மல்லிகைப் பூ.

Updated On :7 பிப்ரவரி 2024, 8:50 pm IST

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை சந்தைகளில் அனைத்து காய்கறிகளின் விலையும் உயா்ந்துள்ள நிலையில் ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ. 3,000-க்கு விற்பனையாகிறது.

மதுரை மாட்டுத்தாவணி, மலர் சந்தையில் வெள்ளக்கிழமை வரை ரூ.1000-க்கு விற்பனையான பூக்கள் விலை சனிக்கிழமை ரூ.3000 வரை விலை அதிகரித்துள்ளது.

மல்லிகைப் பூ ஒரு கிலோ ரூ. 3000-க்கும், பிச்சிப்பூ மற்றும் முல்லை ஆகிய பூக்கள் கிலோ ரூ.2000-க்கும், மெட்ராஸ் மல்லி கிலோ ரூ.2000-க்கும், சம்மங்கி , செவ்வந்தி கிலோ ரூ.250-க்கும், செண்டுமல்லி கிலோ ரூ.100-க்கும், அரளி கிலோ ரூ.450-க்கும், பன்னீர் ரோஸ் கிலோ ரூ.300-க்கும், பட்டன் ரோஸ் கிலோ ரூ. 250-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளிக்கிழமை மல்லிகை கிலோ ரூ.1000-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், சனிக்கிழமை கிலோ ரூ.3,000 ஆக விலை அதிகரித்துள்ளது. இதேபோன்று முல்லை மற்றும் பிச்சி  பூ கிலோ ரூ.1000-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் சனிக்கிழமை கிலோ ரூ.2,000 ஆக விலை அதிகரித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.