இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

பொங்கல் பண்டிகை: ஒரு கிலோ மதுரை மல்லி ரூ. 3,000-க்கு விற்பனை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை சந்தைகளில் அனைத்து காய்கறிகளின் விலையும் உயா்ந்துள்ள நிலையில் ஒரு கிலோ மதுரை மல்லிகைப் பூ ரூ. 3,000-க்கு விற்பனையாகிறது.

News image

மலர் சந்தையில்  ரூ.3,000 ஆக விலை அதிகரித்துள்ள மதுரை மல்லிகைப் பூ.

Updated On :13 ஜனவரி 2024, 5:01 am

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை சந்தைகளில் அனைத்து காய்கறிகளின் விலையும் உயா்ந்துள்ள நிலையில் ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ. 3,000-க்கு விற்பனையாகிறது.

மதுரை மாட்டுத்தாவணி, மலர் சந்தையில் வெள்ளக்கிழமை வரை ரூ.1000-க்கு விற்பனையான பூக்கள் விலை சனிக்கிழமை ரூ.3000 வரை விலை அதிகரித்துள்ளது.

மல்லிகைப் பூ ஒரு கிலோ ரூ. 3000-க்கும், பிச்சிப்பூ மற்றும் முல்லை ஆகிய பூக்கள் கிலோ ரூ.2000-க்கும், மெட்ராஸ் மல்லி கிலோ ரூ.2000-க்கும், சம்மங்கி , செவ்வந்தி கிலோ ரூ.250-க்கும், செண்டுமல்லி கிலோ ரூ.100-க்கும், அரளி கிலோ ரூ.450-க்கும், பன்னீர் ரோஸ் கிலோ ரூ.300-க்கும், பட்டன் ரோஸ் கிலோ ரூ. 250-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளிக்கிழமை மல்லிகை கிலோ ரூ.1000-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், சனிக்கிழமை கிலோ ரூ.3,000 ஆக விலை அதிகரித்துள்ளது. இதேபோன்று முல்லை மற்றும் பிச்சி  பூ கிலோ ரூ.1000-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் சனிக்கிழமை கிலோ ரூ.2,000 ஆக விலை அதிகரித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.