ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

சாலையில் பொங்கல் வாழ்த்து எழுதிய இளைஞர் அடித்துக் கொலை!

தஞ்சாவூர் அருகே சாலையில் பொங்கல் வாழ்த்து எழுதியது தொடர்பாக ஏற்பட்ட தகராறை சமாதானப்படுத்திய இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

News image
Updated On :15 ஜனவரி 2024, 2:08 pm

DIN


தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே சாலையில் பொங்கல் வாழ்த்து எழுதியது தொடர்பாக ஏற்பட்ட தகராறை சமாதானப்படுத்திய இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

தஞ்சாவூர் அருகே புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இருவர் பொங்கல் வாழ்த்து என எழுதிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த சிலர் வழிவிடுமாறு தெரிவித்துள்ளனர். இதைனை தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.

மாரியம்மன் கோயில் பூண்டி தெருவைச் சேர்ந்த அண்ணாதுரை மகன் அசோக்குமார்(35), சாலிய குளக்கரைத் தெருவைச் சேர்ந்த பால்ராஜ் மகன் முனியப்பன்(27) இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தர். இதற்கு பிறகு, மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள்  தங்களது பகுதிக்கு சென்று மேலும் சிலரை திரட்டி நிகழ்விடத்துக்கு சென்று, அங்கிருந்த அசோக்குமாரையும், முனியப்பனையும் தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த அசோக்குமார் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த முனியப்பன் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து தஞ்சாவூர் தாலுகா காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து ஆகாஷ்(24), பாலமுருகன்(22), பாலகுமார்(24), விஜய்(23), சதீஷ்குமார்(29), வினோத்(27) ஆகிய 6 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.