மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

வேங்கைவயல் வழக்கு பிப். 12க்கு ஒத்திவைப்பு!

வேங்கைவயலில் 10 பேரிடம் உண்மை அறியும் சோதனை நடத்தக் கோரும் சிபி சிஐடி மனு மீதான விசாரணை வரும் பிப். 12ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

News image

வேங்கைவயல் வழக்கு பிப். 12க்கு ஒத்திவைப்பு

Updated On :29 ஜனவரி 2024, 7:12 am

புதுக்கோட்டை: வேங்கைவயலில் 10 பேரிடம் உண்மை அறியும் சோதனை நடத்தக் கோரும் சிபி சிஐடி மனு மீதான விசாரணை வரும் பிப். 12ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பிலுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் தற்போது சிபி சிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கெனவே 31 பேரிடம் மரபணு பரிசோதனை நடத்தப்பட்டுள்ள நிலையில் அடுத்தகட்டமாக 10 பேரிடம் உண்மை அறியும் சோதனை நடத்த முடிவு செய்தனர். 

இதற்கான மனு மாவட்ட எஸ்சிஎஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அண்மையில் ஒத்திவைக்கப்பட்ட இம்மனு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

இதைத் தொடர்ந்து வரும் பிப்.12ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்து நீதிபதி எஸ். ஜெயந்தி உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.