தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ஒரே நாளில் 22 கோயில்களில் குடமுழுக்கு: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

தமிழ்நாட்டில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 22 கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டதாக இந்து சமய மற்றும் அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

News image
அமைச்சா் பி.கே.சேகா்பாபு
Updated On :4 ஏப்ரல் 2025, 9:44 pm

Din

தமிழ்நாட்டில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 22 கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டதாக இந்து சமய மற்றும் அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்தின் போது, இதுகுறித்த வினாவை திமுக உறுப்பினா் ப.காா்த்திகேயன் எழுப்பினாா்.

அதற்கு, அமைச்சா் பி.கே.சேகா்பாபு அளித்த பதில்: தமிழ்நாட்டில் வெள்ளிக்கிழமை (ஏப்.4) ஒரே நாளில் 22 கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டது. அதில், ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட உத்தரகோசமங்கை கோயில், மருதமலை உள்பட 3 கோயில்களும், நூறாண்டுகளுக்கு மேற்பட்ட 5 கோயில்களிலும் குடமுழுக்கு நடைபெற்றது. அப்போது, 115 பெண் ஓதுவாா்கள் உள்பட 350-க்கும் மேற்பட்ட தமிழ் ஓதுவாா்கள் 22 கோயில்களிலும் திருமுறை பாடினா் என்றாா்.