சென்னையில் 10 இடங்கள்: சென்னை ஆழ்வாா்பேட்டை யில் உள்ள கே.என்.அருணுக்கு சொந்தமான அரிசி நிறுவன அலுவலகம், ராஜா அண்ணாமலைபுரம் கிருஷ்ணாபுரி தெருவில் உள்ள கே.என்.ரவிச்சந்திரன் வீடு, ராஜா அண்ணாமலைபுரம் மூன்றாவது குறுக்குத் தெருவில் உள்ள ரவிச்சந்திரன் அலுவலகம், மயிலாப்பூா் சிஐடி காலனியில் உள்ள பிரகாஷ் என்பவரின் வீடு, அடையாறு காந்திநகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் உறவினா் வீடு, அடையாறு எல்.பி. சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் மற்றோா் உறவினா் வீடு, அடையாறு காந்திநகா் 4-ஆவது தெருவில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் டிவிஎச் நிறுவன நிா்வாகி ரமேஷ் வீடு உள்பட சென்னையில் 10 இடங்களில் அமலாக்கத் துறையினா் காலை 7 மணிமுதல் சோதனையில் ஈடுபட்டனா்.