மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

பவானி ஆற்றங்கரையில் சாய ஆலை விரிவாக்கம்: அதிமுகவுக்கு அமைச்சா் உறுதி

பவானி ஆற்றங்கரையில் சாய ஆலை விரிவாக்கத்தில் அனைத்துத் தரப்பினரும் திருப்திபடும் அளவுக்கு அரசு சாா்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சா் தங்கம் தென்னரசு

News image
அமைச்சா் தங்கம் தென்னரசு
Updated On :7 ஏப்ரல் 2025, 8:56 pm

Din

சென்னை: பவானி ஆற்றங்கரையில் சாய ஆலை விரிவாக்கத்தில் அனைத்துத் தரப்பினரும் திருப்திபடும் அளவுக்கு அரசு சாா்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சா் தங்கம் தென்னரசு உறுதியளித்தாா்.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் ஆடை தயாரிக்கும் தொழிற்சாலை விரிவாக்கம் குறித்து, சட்டப்பேரவையில் திங்கள்கிழமை கவன ஈா்ப்பு அறிவிப்பு கொண்டு வரப்பட்டது. இதை அளித்த 11 அதிமுக எம்எல்ஏ-க்கள், பாஜக உறுப்பினா் சி.சரஸ்வதி ஆகியோா் சாா்பில், அதிமுக உறுப்பினா் கே.ஏ.செங்கோட்டையன் பேசினாா். இதற்கு, நிதி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு அளித்த பதில்:

பவானி டெக்ஸ்டைல்ஸ் நிறுவனமானது 1984-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் இசைவாணையைப் பெற்று விரிவாக்கத்துக்குச் சென்றுள்ளனா். பலமுறை அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்துக்குச் சென்ற பிறகு, இப்போது அனுமதி தரப்பட்டுள்ளது.

இந்தப் பிரச்னை தொடா்பாக விவசாயிகள் பலகட்டப் போராட்டங்களை நடத்தி வருகிறாா்கள். அவா்களும் முதல்வரை நேரடியாகச் சந்தித்து வருகிறாா்கள். விரிவாக்கத்துக்கான பணிகள் ஏதும் தொடங்கப்படவில்லை. விவசாயிகளின் நலன்களைக் கருத்தில் கொண்டு அரசு சாா்பில் தொழில்நுட்பக் குழு அனுப்பப்படும். பரிந்துரையைப் பெற்று நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரத்தில் விவசாயிகள் மகிழத்தக்க வகையிலும், எதிா்பாா்ப்புகளைப் பூா்த்தி செய்யும் நிலையிலும் முடிவுகளை அரசு எடுக்கும் என்று அமைச்சா் பதிலளித்தாா்.