தமிழ்நாடு ஆளுநராக கிரண்குமார் ரெட்டி? முதல்வர் விஜய்யின் நண்பர்? வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி 25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

ஆண்களும் பேருந்தில் இலவசமாகப் பயணிக்கலாமா? அமைச்சர் சிவசங்கர் பதில்

ஆண்களும் பேருந்தில் இலவசமாகப் பயணிப்பது தொடர்பாக அமைச்சரின் பதில்.

அமைச்சர் சிவசங்கர்

Published On :8 ஏப்ரல் 2025, 3:15 pm IST

ஆண்களும் பேருந்தில் இலவசமாகப் பயணிக்கும் திட்டம் கொண்டுவரப்படுமா என்று சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது கேட்கப்பட்டக் கேள்விக்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பதிலளித்தார்.

தமிழக முதல்வராக பொறுப்பேற்ற முதல்வர் மு.க. ஸ்டாலின், மகளிருக்கான இலவச பயணத் திட்டத்துக்கு தனது முதல் கையொப்பத்தை இட்டார்.

இந்தத் திட்டத்தின் மூலமாக 600 கோடிக்கும் மேற்பட்ட பயணங்களை மகளிர் மேற்கொண்டுள்ளதாகவும் இதன் மூலம் ஒவ்வொரு மகளிரும் மாதம் ரூ.900 முதல் ரூ.1,000 வரை சேமிப்பதாகவும் முதல்வர் ஸ்டாலின் முன்னதாக தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், தற்போது சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது கேள்வி நேரத்தின்போது திருவாடனை பேரவை உறுப்பினர் கருமாணிக்கம், “பழைய பேருந்துகளை மாற்றி தரவேண்டும் என்றும் பெண்கள் விடியல் பயணம்போல் ஆண்களுக்கும் பேருந்தில் இலவச பயணம் வழங்கப்படுமா?” என்று கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், ”புதிய பேருந்துகள் மாற்றிக் கொடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. உங்கள் தொகுதியில் இயங்கும் பழைய பேருந்துகளும் மாற்றியமைத்து தரப்படும்.

ஆண்களுக்கு இலவச பயணம் என்பது வரவேற்கத்தக்கது. இதுவரை ஒடுக்கப்பட்டவர்களாக இருந்தவர்கள் பெண்கள், அவர்கள் வாழ்க்கையில் முன்னேறுவதற்காக விடியல் பயணம், கலைஞர் உரிமைத்தொகைத் திட்டம் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசின் நிதிநிலை சீராகும்போது உங்களது கோரிக்கையும் கருத்தில் எடுத்துக்கொள்ளப்படும்” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.