புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மசோதா மீது ஒப்புதல் அளிக்க ஆளுநர்களுக்கு காலக்கெடு நிர்ணயம்: உச்ச நீதிமன்றம்

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர்களுக்கு கால அவகாசம் நிர்ணயித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

News image

உச்ச நீதிமன்றம்

Updated On :8 ஏப்ரல் 2025, 6:11 am

DIN

புது தில்லி: ஒரு மாநிலத்தின் பேரவையில் நிறைவேற்றி ஆளுநர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் மசோதாக்களுக்கு ஒரு மாத காலத்துக்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் காலக்கெடு நிர்ணயித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், ஒரு சட்டத்திருத்த மசோதாவை மாநில அரசு, பேரவையில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்படும்போது, அது உயிர்ப்புடன்தான் இருக்கும். ஆனால், அதனை அந்த மாநில ஆளுநர் பெற்றுக்கொண்டு நிலுவையில் வைத்துவிட்டால், அது எலும்புக்கூடாக அல்லது வெறும் காகிகதமாக மாறிவிடும்.

எனவே, மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர்கள் ஒரு மாதத்துக்குள் ஒப்புதல் அளித்து விட வேண்டும்.

ஒருவேளை, மசோதாக்களை திருப்பி அனுப்பிவைப்பதாக இருந்தால், இரண்டு மாதத்துக்குள் அனுப்பி வைத்து விட வேண்டும்.

ஆனால், ஒரு மாதத்துக்குள், மாநில அரசு அனுப்பிய மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கிறேன் அல்லது திருப்பி அனுப்பிவிடுவேன் என்பதை ஆளுநர் மாநில அரசுக்கு அறிவித்துவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது.

தமிழ்நாடு பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்காக ஆளுநருக்கு மீண்டும் அனுப்பப்பட்ட 10 மசோதாக்களுக்கு அவா் ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்திருந்ததை எதிர்த்தும், தமிழகத்தின் மூன்று பல்கலைக்கழகங்களில் துணை வேந்தா்களின் நியமன விவகாரத்தில் ஆளுநரின் தலையீடு அதிகரிப்பதாகவும் கூறி தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துளள்து.

அதன்படி, ஆளுநர் கிடப்பில் வைத்திருந்த மசோதாக்கள் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக, தனது சிறப்பு அதிகாரத்தின்படி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்த நிலையில், தமிழக ஆளுநர் மட்டுமல்லாமல், அனைத்து மாநில ஆளுநர்கள் அனைவருமே, ஒரு மசோதாவுக்கு ஒரு மாதத்துக்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று காலக்கெடுவையும் உச்ச நீதிமன்றம் நிர்ணயித்துவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.