ஜூன் 23 வரை 3 நாள்கள் சட்டப்பேரவைக் கூட்டம்! அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு74 ஆண்டு கால வரலாற்றில் கூட்டணி ஆட்சி மூலமாக புதிய சாதனை! ஆளுநர் உரைதமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடரும்! பேரவையில் ஆளுநர் உரைபாரபட்சம் காட்டும் மத்திய அரசு! அரசு உரையை மாற்றமின்றி வாசிக்கும் ஆளுநர்! ஜனநாயகத்தில் மக்களே நாயகர்கள்! அண்ணா உரையை சுட்டிக் காட்டி ஆளுநர்! தமிழ்த்தாய் வாழ்த்துடன்... தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது! வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை!முதலில் வந்தே மாதரமா? தமிழ்த்தாய் வாழ்த்தா? விசிக கேள்வி! அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது!
/

நாடு முழுவதும் காடுகளைப் பாதுகாக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம்

நாடு முழுவதும் உள்ள காடுகளைப் பாதுகாக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது பற்றி...

News image

உச்ச நீதிமன்றம்.  - கோப்புப் படம்.

Updated On :18 ஜூன் 2026, 4:24 pm IST

நாடு முழுவதும் உள்ள காடுகளைப் பாதுகாக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை (ஜூன் 18) உத்தரவிட்டுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாதுகாக்கப்பட வேண்டிய இயற்கை சூழல் அமைப்புகள் உள்ளதைச் சுட்டிக்காட்டி இந்த உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த ஜனவரி மாதம், பாதுகாக்கப்பட்ட காடுகளின் எல்லைகளிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவுக்குள் கல் குவாரி அல்லது கல் உடைக்கும் ஆலைகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று ஜார்க்கண்ட் மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட எல்லையாக இருந்த 400 முதல் 500 மீட்டரை 250 மீட்டராக குறைக்க உத்தரவிடும்படி, தாக்கல் செய்த மனுவுக்கு எதிராக இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

இதனையடுத்து, ஜார்க்கண்ட் மாநில உயர் நீதிமன்றம் தனது ஏப்ரல் மாத உத்தரவில் கல் குவாரி அமைப்பதற்கு காடுகளின் எல்லைகளிலிருந்து 500 மீட்டர் தொலைவுக்கும், கல் உடைக்கும் ஆலைகள் 400 மீட்டர் தொலைவிலும் அமைப்பதற்கான கட்டுப்பாடு பொருந்தும் என்று கூறியிருந்தது.

இதனை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு மேல்முறையீடு செய்யப்பட்டது. அதன்படி, தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதி வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரித்தது.

நீதிபதிகள் கூறியதாவது:

“நமது உயர் நீதிமன்றங்களின் கருத்தை நாம் சீர்குலைக்க முடியாது. உயர் நீதிமன்றங்கள் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்று அறிவுரை கூற நாம் தலைமை ஆசிரியர்கள் அல்ல. உயர் நீதிமன்றங்களும் அரசியலமைப்பு நீதிமன்றங்கள் ஆகும்.

மேலும், அதிகாரமுள்ள இந்த அமைப்பு ஏற்கெனவே வழங்கிய தொலைவைக் குறைத்துள்ளது. உயர்நீதிமன்றமே இந்த வழக்கில் இறுதித் தீர்ப்பு அளிக்க வேண்டும். இருப்பினும், ஜார்க்கண்ட் மாநிலம் உள்பட நாடு முழுவதும் காடுகள் பாதுகாக்கப்பட வேண்டும்” என்று அவர்கள் தெரிவித்தனர்.

Summary

The Supreme Court ordered on Thursday (June 18) that forests across the country must be protected.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.