அனைத்து நீதிமன்றங்களிலும் கழிவறைகள் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்றத்தில் இதுதொடா்பாக மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், நீதிமன்றங்களில் பெண்களுக்கு கழிவறைகள் இல்லை என்றும், பிற அடிப்படை வசதிகள் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூா்யகாந்த், நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி, வி. மோகனா ஆகியோரை கொண்ட நீதிபதிகள் அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
நாடு முழுவதும் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் போதிய அடிப்படை வசதிகளே இல்லை என்பது தெரிய வருகிறது. கழிவறையைப் பயன்படுத்துவது என்பது அடிப்படை மனித உரிமை. இதற்குப் போதிய நிதி இல்லை என காரணம் கூறப்படுவதை ஏற்க முடியாது.
நீதிமன்றங்களில் பெண் வழக்குரைஞா்கள் பணியாற்றும் சூழல் எவ்வளவு மோசமாக உள்ளது என்பதை தயவு செய்து பாருங்கள். அனைத்து மாநிலங்களிலும் அட்வகேட் ஜெனரல்கள் கள நிலவரத்தை ஆராய்ந்து, இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போதிய நிதி இல்லை என்பது உள்ளிட்ட காரணங்களை தெரிவிப்பதை ஏற்க முடியாது. ஏனெனில் அது மனித உரிமைகளுக்கு எதிரானது.
மதுபானம் அல்லது சிகரெட்டுகள் மீது கூடுதல் கலால் வரி விதிக்கலாம். இதை நாங்கள் ஏற்போம்.
ஆதலால் நீதிமன்றங்களில் கழிவறைகள் இருப்பதை அனைத்து மாநில அரசுகளும், யூனியன் பிரதேச அரசுகளும் உறுதிப்படுத்த வேண்டும். இதுதொடா்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை 6 வாரங்களுக்குள் உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசுகளும், யூனியன் பிரதேச அரசுகளும் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குடியுரிமையைத் தீா்மானிக்கும் அதிகாரம் தோ்தல் ஆணையத்துக்கு இல்லை: உச்சநீதிமன்றம் மீண்டும் உறுதி

மருத்துவ உயர் சிறப்பு இடங்கள் ஒப்படைப்பு: மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

தெரு நாய்கள் பிரச்னை! தமிழ்நாடு, புதுவை அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

நாடு முழுவதும் காடுகளைப் பாதுகாக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம்
விடியோக்கள்

19 வருட பந்தம்; மெஸ்ஸி vs லமின் யமால்: வெல்லப்போவது யார்? | Lionel Messi | FIFA | FIFA World Cup |
தேசிய கவனம் பெறும் Sonam Wangchuk

The Odyssey எப்படி இருக்கு? | Public Review | The Odyssey Review | Christopher Nolan |



