ஆசிய நாடுகளில் பங்குச் சந்தை முதலீடு! கடைசி இடத்தில் இந்தியா!தென்மாநில முதல்வர்கள் மாநாடு! சென்னை வந்தார் அமித் ஷா!சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்
/

சென்னை: குறைந்துவரும் பேருந்து பயன்பாடு

இருசக்கர வாகனம், ஆட்டோ, வாடகைக் கார்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதாக ஆய்வில் தகவல்

News image

பிரதிப் படம்

Updated On :10 ஏப்ரல் 2025, 10:03 pm IST

சென்னையில் போக்குவரத்துப் பேருந்துகளின் பயன்பாடு குறைந்திருப்பதாக உலக வங்கி மற்றும் சென்னை ஒருங்கிணைந்த மாநகரப் போக்குவரத்து ஆணையம் இணைந்து நடத்திய ஆய்வில் தெரிவித்துள்ளது.

சென்னையில் 15 ஆண்டுகளில் போக்குவரத்து பயன்பாடு குறைந்திருப்பதாக சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. மாநகரப் பேருந்துகளின் பயன்பாடு, 2008-ல் 26 விழுக்காடு என்று இருந்தது; ஆனால், 2023-ல் 18 விழுக்காடாகக் குறைந்தது.

மேலும், இருசக்கர வாகனங்களின் பயன்பாடு, 25 விழுக்காட்டிலிருந்து 37.5 விழுக்காடாக உயர்ந்துள்ளது. ஆட்டோ மற்றும் வாடகை கார்களின் பயன்பாடும் 4 விழுக்காட்டிலிருந்து 7 விழுக்காடாக அதிகரித்துள்ளது.

பேருந்து செல்லும் வேகம், பேருந்துகளின் குறைவான எண்ணிக்கை, பேருந்துக்காக அதிகநேரம் காத்திருத்தல், பேருந்தில் நெரிசல் உள்ளிட்ட காரணங்களால்தான், பேருந்துகளின் பயன்பாடு குறைந்திருப்பதாக ஆய்வு கூறுகிறது.

மேலும், இதனை அதிகரிக்க 2031 - 32 ஆம் ஆண்டுக்குள் கூடுதலாக 6,457 பேருந்துகளும், 2,343 பேருந்துகளை நீக்கிவிட்டு, அதற்கு பதிலாக புதிய பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்றும் ஆய்வில் தெரிவிக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.