தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! அப்போ சென்னைக்கு?
தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிப்பு


சென்னை: தமிழகத்தில் நீலகிரி, கோவை, திண்டுக்கல் ஆகிய மூன்று மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, திண்டுக்கல் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். நாளை தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
அதுபோல, வரும் 14 முதல் 18ஆம் தேதி வரை தமிழகம், புதுவையில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 14ஆம் வரை தமிழகத்தில் பெரும்பாலும் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் எதுவும் இருக்காது.
வரும் 15 மற்றும் 16ஆம் தேதிகளில் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை சற்று குறையக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னையில் வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் முதல் 37 - 38 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கடுமையான வெப்பம் வாட்டி வதைத்து வரும் வேளையில், வெள்ளிக்கிழமை அதிகாலை பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் பூமி ஓரளவு குளிர்ந்தது. இதுபோல தொடர்ந்து அடுத்தடுத்த நாள்களும் மழை பெய்யுமா என மக்கள் எதிர்பார்த்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...