மின்சாரம் பாய்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி!
மின்சாரம் பாய்ந்து மூவர் பலி தொடர்பாக...


விருதுநகர் அருகே மின்சாரம் பாய்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காரிசேரி மாரியம்மன் கோயில் திருவிழாவில் ஒலிப்பெருக்கி கட்டும் பணியின்போது உயர் அழுத்த மின் கம்பியின் மீது உரசி மின்சாரம் பாய்ந்து விபத்து ஏற்பட்டது.
இவ்விபத்தில் உரிமையாளர் திருப்பதி, மனைவி லலிதா, பாட்டி பாக்கியம் ஆகிய மூவர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
இவர்களைக் காப்பாற்றச் சென்றபோது கவின், தர்மர் ஆகியோருக்கு காயம் ஏற்பட்ட நிலையில், இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...