உத்தரகண்ட் மாநிலத்தில் தோண்டப்பட்டு வந்த சில்க்யாரா சுரங்கப் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது. இருபக்கத்திலிருந்தும் தோண்டப்பட்டு வரும் சில்க்யாரா சுரங்கம் புதன்கிழமை, ஒன்றையொன்று சந்திக்கவிருக்கிறது.
கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சில்க்யாரா சுரங்கத்தில் விபத்து நேரிட்டு, தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள், சுரங்கத்துக்குள் சிக்கிக்கொண்டனர்.
இதன் மூலம் ஒட்டுமொத்த நாட்டின் பார்வையும் சில்க்யாரா சுரங்கத்தின் மீது குவிந்தது. சார் தாம் கோயில்களுக்குச் செல்ல மிக விரைவான பயணத்தை ஏற்படுத்தும் இந்த பாதையை அமைக்கும் பணி ஒரு சில ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், 40 தொழிலாளர்கள் சுரங்கத்துக்குள் சிக்கிக் கொண்டனர். சுமார் 17 நாள்கள் போராட்டத்துக்குப் பிறகு தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்.
சுமார் 4.5 கி.மீ. சுரங்கப் பாதையை அமைக்கும் பணிக்கு பல கோடி ரூபாய் செலவிடப்பட்டு வருகிறது. புதன்கிழமை சுரங்கம் தோண்டும் பணி நிறைவடைந்து, முழுமையாக இந்தப் பக்கத்திலிருந்து புறப்பட்டு அந்தப் பக்கத்துக்குச் செல்லும் வகையில் சுரங்கும் மாறவிருக்கிறது.
எனவே, அடுத்த ஓராண்டுக்குள் சுரங்கப் பாதையில் சீரமைப்பு மற்றும் ஒழுங்கமைப்புப் பணிகள் முடிக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டுக்குத் திறந்துவிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓமலூா் அருகே ரயில்வே சுரங்கப் பாதை மழைநீரில் காா் மூழ்கியதில் தம்பதி உயிரிழப்பு

நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!
மூலக்கடை பகுதியை வந்தடைந்த ‘சோ்வராயன்’! மெட்ரோ சுரங்கப்பாதை பணி நிறைவு

ஆரவல்லி மலை விவகாரம்: சுரங்க குத்தகைதாரா்களுக்கு ஆதரவான உத்தரவு பிறப்பிக்கப்படாது - உச்சநீதிமன்றம்
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



