கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தமிழக அரசிடமிருந்து ஊதியம் பெற மாட்டேன்: நீதிபதி குரியன் ஜோசப்

ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் பேட்டி...

News image

நீதிபதி குரியன் ஜோசப்

கோப்புப்படம்

Updated On :16 ஏப்ரல் 2025, 5:46 am

DIN

தமிழக அரசிடமிருந்து ஊதியம் பெற மாட்டேன் என்று மாநில உரிமைகளை மீட்டெடுக்க அமைக்கப்பட்ட குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் தெரிவித்துள்ளார்.

மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான உறவுகளை மேம்படுத்தவும், மாநில உரிமைகளை மீட்டெடுக்கவும் தேவையான ஆலோசனைகள், பரிந்துரைகளை வழங்க உயா்நிலைக் குழு அமைத்து முதல்வா் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் நேற்று அறிவிப்பு வெளியிட்டாா்.

இந்த குழுவின் தலைவராக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப்பை முதல்வர் ஸ்டாலின் நியமித்துள்ளார். இதன் உறுப்பினா்களாக இந்திய கடல்சாா் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான அசோக் வரதன் ஷெட்டி, தமிழ்நாடு மாநில திட்டக் குழுவின் முன்னாள் துணைத் தலைவா் மு.நாகநாதன் ஆகியோா் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், குழுத் தலைவராக நியமிக்கப்பட்டது பற்றி நீதிபதி குரியன் ஜோசப் தெரிவித்ததாவது:

“மத்திய - மாநில அரசுகளுக்கு இடையேயான உறவு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை ஒவ்வொரு காலகட்டத்திலும் ஆய்வு செய்வது அவசியம். இரு அரசுகளுக்கு இடையே நிதி சார்ந்த கொள்கைகள், நிர்வகிக்கும் அதிகாரங்கள் உள்ளிட்ட அனைத்தையும் ஆய்வுக்கு உட்படுத்துவது அவசியம்.

அரசு அமைத்துள்ள இந்த குழு வெளிப்படைத்தன்மையுடன் செயல்படும். என்னை தலைவராக நியமித்த முதல்வருக்கு நன்றி. இந்தப் பணிக்காக அரசிடமிருந்து எந்த ஊதியமும் பெற மாட்டேன் என்று நான் வைத்த கோரிக்கையை ஏற்றதற்கு முதல்வருக்கு நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த உயா்நிலைக் குழு தனது இடைக்கால அறிக்கையை அடுத்த ஆண்டு ஜனவரி மாத இறுதிக்குள்ளும், இறுதி அறிக்கையை இரண்டு ஆண்டுகளிலும் அரசுக்கு வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.