குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

அதிமுக - பாஜக கூட்டணியை பிளவுபடுத்த வேண்டாம்: நயினார் நாகேந்திரன்

அதிமுக - பாஜக கூட்டணியை பிளவுபடுத்த வேண்டாம் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.

News image
நயினார் நாகேந்திரன்(கோப்புப்படம்)
Updated On :17 ஏப்ரல் 2025, 6:25 am

DIN

சென்னை: அதிமுக - பாஜக கூட்டணியை பிளவுபடுத்த வேண்டாம் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

உள்துறை அமைச்சர் அமித் ஷா, கூட்டணிக் கட்சியின் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்பட்டு செயல்படுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.

தீரன் சின்னமலை சிலைக்கு மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரனிடம், அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி, கூட்டணியில் அங்கம் வகிக்கிறோம், ஆனால், கூட்டணி ஆட்சி கிடையாது என்று கூறியிருந்ததையும், இதே கருத்தை தம்பிதுரையும் வலியுறுத்தியிருந்தது குறித்தும் கேட்கப்பட்டது.

இதனைக் கேட்ட நயினார் நாகேந்திரன், அதிமுக - பாஜக கூட்டணியை பிளவுபடுத்த நினைக்க வேண்டாம், தமிழகத்திலிருந்து திமுக ஆட்சியை அகற்றுவதே இலக்கு என்றும் தெரிவித்தார்.

அதிமுக - பாஜக கூட்டணியில் பாமக இடம்பெறுமா என்று கேட்டதற்கு, நன்றி வணக்கம் என பதிலளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.