விசைத்தறி நெசவாளர்களுக்கு ஆதரவான போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
சூலூர் அருகே சோமனூரில் விசைத்தறி உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் கூலி உயர்வு வேண்டுமெனவும் மின்கட்டணத்தை குறைக்க வேண்டும் எனவும் கூறி கடந்த 32 நாட்களாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி, கடந்த 6 நாள்களாக காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து கோவை, திருப்பூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கருமத்தம்பட்டி நால்ரோடு பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அரசு காலம் தாழ்த்துவதைக் குறித்து கண்டனத்தை தெரிவித்தனர். விரைந்து முத்தரப்பு பேச்சுவர்த்தையை நடத்தி விசைத்தறி உரிமையாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என கேட்டு கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர். இதனை அடுத்து திடீரென ஆர்ப்பாட்டம் நடைபெற்ற பகுதியில் இருந்து முழக்கங்களை எழுப்பியவாறு உண்ணாவிரத பந்தலுக்கு ஊர்வலமாக வந்தனர்.
இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் போலீசாரிடம் ஆர்ப்பாட்டத்துக்கு மட்டும் அனுமதி வாங்கிவிட்டு பேரணி நடத்தியதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் கருமத்தம்பட்டி போலீசார் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பேரணி அனுமதி பெறவில்லை எனவும், அனுமதியின்றி பேரணி நடத்தியது குறித்து கருமத்தம்பட்டி உள்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் தங்கராமன், கருமத்தம்பட்டி காவல் ஆய்வாளர் வடிவேலு உள்ளிட்டோர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருடன் காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாஜக + திமுக + அதிமுக எனும் கொள்கை புடலங்காய்! திமுகவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ. பதிலடி!

இடதுசாரி கட்சிகளின் ஒருங்கிணைப்புக் குழு தொடக்கம்

சேலம் பாலியல் வன்கொடுமை வழக்கு: சிபிசிஐடி விசாரணை கோரும் மார்க்சிஸ்ட் கம்யூ.

இயக்குநர் பாரதிராஜா மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ. இரங்கல்!
விடியோக்கள்

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani

UN Kannan Interview | விஜய், உதயநிதி மோதல் தொடர்ந்தால்...? | CM Vijay | TVK | Udhayanidhi | DMK



