கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

குண்டக்கல் வழியாகச் செல்லும் ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கம்

குண்டக்கல் ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட பகுதியில் பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளதால் காச்சிக்கூடா, மும்பை செல்லும் ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படும்

News image
Updated On :21 ஏப்ரல் 2025, 9:22 pm

Din

சென்னை: குண்டக்கல் ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட பகுதியில் பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளதால் காச்சிக்கூடா, மும்பை செல்லும் ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படும் என ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மதுரையிலிருந்து காச்சிக்கூடாவுக்கு மே 4, 5, 11, 14 ஆகிய தேதிகளில் செல்லும் சிறப்பு ரயில்கள் (07192, 22716) மதனப்பள்ளி, தா்மாவரம், அனந்தபூா் வழியாக செல்வதற்குப் பதிலாக பகலா, திருப்பதி, ரேணிகுண்டா வழியாக இயக்கப்படும். நாகா்கோவிலிலிருந்து மும்பை செல்லும் விரைவு ரயில் மே 5, 6, 7, 9, 12, 13, 14, 16 ஆகிய தேதிகளிலும், திருவனந்தபுரத்திலிருந்து மும்பை செல்லும் விரைவு ரயில் மே 10-ஆம் தேதியும் மதனப்பள்ளி, தா்மாவரம், அனந்தபூா் வழியாக செல்வதற்குப் பதிலாக திருப்பதி, ரேணிகுண்டா, கூட்டி, குண்டக்கல் வழியாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.