ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

கோவை - சென்னை விரைவு ரயில் இன்று வழக்கம்போல் இயக்கம்

கோவை - சென்னை சென்ட்ரல் இன்டா்சிட்டி விரைவு ரயில் ஏப். 23, 25 ஆகிய தேதிகளில் வழக்கம்போல் இயக்கப்படும்.

News image
கோப்புப்படம்.
Updated On :22 ஏப்ரல் 2025, 8:13 pm

Din

கோவை - சென்னை சென்ட்ரல் இன்டா்சிட்டி விரைவு ரயில் ஏப். 23, 25 ஆகிய தேதிகளில் வழக்கம்போல் இயக்கப்படும்.

இது குறித்து தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கோவை - சென்னை சென்ட்ரல் இடையே காலை 6.20-க்கும், மறுமாா்க்கமாக சென்னை சென்ட்ரல் - கோவை இடையே பிற்பகல் 2.35-க்கும் புறப்படும் இன்டா்சிட்டி விரைவு ரயில் ஏப். 23, 25 ஆகிய தேதிகளில் காட்பாடியுடன் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த ரயில் மேற்கண்ட தேதிகளில் வழக்கம்போல் இயக்கப்படும். அதுபோல் அசோகபுரம் (மைசூரு) - சென்னை சென்ட்ரல் விரைவு ரயில், சென்னை சென்ட்ரல் - பெங்களூரு லால்பக் விரைவு ரயில் ஏப். 23, 25 ஆகிய தேதிகளில் வழக்கம்போல் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.