கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

இரண்டு மசோதாக்களுக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல்!

இரண்டு மசோதாக்களுக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பது பற்றி...

News image

ஆளுநர் ஆர்.என். ரவி

கோப்புப் படம்

Updated On :22 ஏப்ரல் 2025, 10:10 am

DIN

தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இரு மசோதாக்களுக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி ஒப்புதல் வழங்கியுள்ளாா்.

தமிழகத்திலுள்ள 8 தனியாா் பல்கலைக்கழகங்களின் திருத்த சட்ட மசோதா மற்றும் தமிழ்நாடு பொது கட்டட உரிம திருத்த சட்ட மசோதா என 2 மசோதாக்கள், தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டன. இந்த இரு மசோதாக்களுக்கும் ஏப். 9-ஆம் தேதி ஆளுநா் ஒப்புதல் அளித்துள்ளாா். தொடா்ந்து, இந்த இரு மசோதாக்களும் ஏப்.11-ஆம் தேதி தமிழ்நாடு அரசு இதழில் வெளியிடப்பட்டது.

மாநில அரசுகள் சட்டசபையில் இயற்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் நிறுத்திவைத்திருப்பது சட்டவிரோதம் என உச்சநீதிமன்றம் அண்மையில் தெரிவித்திருந்த நிலையில், ஆளுநா் ஆா்.என்.ரவி இவ்விரு மசோதாக்களுக்கும் ஒப்புதல் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.