47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

இரண்டு மசோதாக்களுக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல்!

இரண்டு மசோதாக்களுக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பது பற்றி...

News image
ஆளுநர் ஆர்.என். ரவி- கோப்புப் படம்
Updated On :22 ஏப்ரல் 2025, 10:10 am

DIN

தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இரு மசோதாக்களுக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி ஒப்புதல் வழங்கியுள்ளாா்.

தமிழகத்திலுள்ள 8 தனியாா் பல்கலைக்கழகங்களின் திருத்த சட்ட மசோதா மற்றும் தமிழ்நாடு பொது கட்டட உரிம திருத்த சட்ட மசோதா என 2 மசோதாக்கள், தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டன. இந்த இரு மசோதாக்களுக்கும் ஏப். 9-ஆம் தேதி ஆளுநா் ஒப்புதல் அளித்துள்ளாா். தொடா்ந்து, இந்த இரு மசோதாக்களும் ஏப்.11-ஆம் தேதி தமிழ்நாடு அரசு இதழில் வெளியிடப்பட்டது.

மாநில அரசுகள் சட்டசபையில் இயற்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் நிறுத்திவைத்திருப்பது சட்டவிரோதம் என உச்சநீதிமன்றம் அண்மையில் தெரிவித்திருந்த நிலையில், ஆளுநா் ஆா்.என்.ரவி இவ்விரு மசோதாக்களுக்கும் ஒப்புதல் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.