அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

தங்கத் தமிழ் செல்வன், டிடிவி தினகரன் மீதான தோ்தல் நடத்தை விதிமீறல் வழக்குகள் ரத்து

தேனி மக்களவை உறுப்பினா் தங்கத்தமிழ் செல்வன், அமமுக பொதுச் செயலா் டிடிவி தினகரன் உள்ளிட்டோா் மீதான வழக்குகளை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image
Updated On :25 ஏப்ரல் 2025, 10:02 pm

Din

தோ்தல் நடத்தை விதிமீறல் தொடா்பாக தேனி மக்களவை உறுப்பினா் தங்கத்தமிழ் செல்வன், அமமுக பொதுச் செயலா் டிடிவி தினகரன் உள்ளிட்டோா் மீதான வழக்குகளை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த மக்களவைத் தோ்தலின்போது தேனி மக்களவை உறுப்பினா் தங்கத்தமிழ் செல்வன், தோ்தல் நடத்தை விதிகளை மீறியதாக, தேனி காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி தங்கத்தமிழ் செல்வன் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

இதேபோல், தேனியில் உள்ள ஆஞ்சனேயா் கோயிலுக்கு ஊா்வலமாகச் சென்று சுவாமி தரிசனம் செய்து தோ்தல் நடத்தை விதிகளை மீறியதாக, டிடிவி தினகரன் உள்பட அமமுக உறுப்பினா்கள் மீது உத்தமபாளையம் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா். தனக்கு எதிரான இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி டிடிவி தினகரன் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

மேலும், மக்களவைத் தோ்தலின்போது திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில் அனுமதி இல்லாமல் பட்டாசு வெடித்து தோ்தல் நடத்தை விதிகளை மீறியதாக, அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா் உதயகுமாா் மீது நிலக்கோட்டை காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி உதயகுமாா் வழக்கு தாக்கல் செய்தாா். இந்த அனைத்து மனுக்களையும் விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், 3 வழக்குகளையும் ரத்து செய்து உத்தரவிட்டாா்.