மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சொந்த மாநில அரசு மீதே ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை ஆளுநர் கூறலாமா? வழக்குரைஞர் வில்சன்

சொந்த மாநில அரசு மீதே ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை ஆளுநர் கூறலாமா? என வழக்குரைஞர் வில்சன் கேள்வி

News image
வழக்குரைஞர் வில்சன் - Center-Center-Chennai
Updated On :25 ஏப்ரல் 2025, 12:18 pm

DIN

தமிழக ஆளுநர், சொந்த மாநில அரசு மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை எவ்வாறு முன்வைக்க முடியும்? என்று தமிழக அரசு வழக்குரைஞர் வில்சன் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்ற பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கான மாநாட்டில் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என். ரவி, தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் கல்வித் தரம் மோசமாக இருப்பதாகவும், துணைவேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்கக் கூடாது என மிரட்டப்பட்டதாகவும் பேசினார்.

இதற்கு கண்டனம் தெரிவித்திருக்கும் திமுக அரசின் வழக்குரைஞர் பி. வில்சன், தமிழக ஆளுநர் ஆர்என் ரவியின் பொறுப்பற்ற மற்றும் தவறான குற்றச்சாட்டுகளுக்கு கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரைத் திருத்தவே முடியாது என்பதை இதன் மூலம் நிரூபித்துள்ளார். தனது சொந்த மாநில அரசு மீது, இவ்வாறு ஒரு அடிப்படை ஆதாரமற்றக் குற்றச்சாட்டை அவர் எப்படி முன்வைக்க முடியும் என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இவ்வாறு தமிழக அரசு மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பது மிக மோசமான குற்றமாக அமைந்துள்ளது. அவரது அதிகாரங்களை அவர் துஷ்பிரயோகம் செய்யக் கூடாது.

சட்டவிரோதமாக, உங்களால் கூட்டப்பட்டிருக்கும் இந்த மாநாட்டில் பல்கலை. துணைவேந்தர்கள் பலரும் பங்கேற்கவில்லை. அதற்குக் காரணம், உங்கள் குறிப்பிட்ட கொள்கைகள் மற்றும் அரசியலை, பல்கலைக்கழகத்துக்குள் திணிக்கும் உங்கள் விஷம நோக்கம் அவர்களுக்குப் புரிந்து விட்டது.

எங்களது பல்கலைக்கழகங்கள், கல்வியில் சிறந்து விளங்கும் மையங்களாக வைத்திருக்கவே நாங்கள் விரும்புகிறோம். எங்கள் பல்கலைக்கழகங்களில் அறிவியல் கல்வியை வழங்குவோமே தவிர, கல்வியை அரசியலாக்கவோ அல்லது போலி அறிவியல் மற்றும் பகுத்தறிவற்ற சித்தாந்தங்களை பரப்பவோ யாரையும் அனுமதிக்க மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.