ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. அரசுப் பள்ளிகள் மோசம்: ஆளுநர் ஆர்.என். ரவி

துணைவேந்தர்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும், அரசுப் பள்ளிகள் மோசமாக இருப்பதாக ஆளுநர் ஆர்.என். ரவி பேச்சு.

News image
ஆளுநர் ஆர்.என். ரவி- கோப்புப் படம்
Updated On :25 ஏப்ரல் 2025, 11:40 am

DIN

மாநாட்டில் பங்கேற்கக் கூடாது என துணைவேந்தர்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும், அரசுப் பள்ளிகளின் கல்வித்தரம் மோசமாக இருப்பதாகவும் ஆளுநர் ஆர்.என். ரவி பேசியிருந்தார்.

நீலகிரி மாவட்டம் உதகை ஆளுநர் மாளிகையில் வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை (ஏப். 25, 26) என இரு நாள்கள் நடைபெறும் பல்கலைக்கழகத் துணைவேந்தா்கள் மாநாடு இன்று காலை தொடங்கியது.

இந்த மாநாட்டை காலை 11.30 மணிக்கு தொடங்கிவைத்து குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கர் துவக்க உரையாற்றினார். இதற்காக தில்லியில் இருந்து கோவை வந்த தன்கர், ஹெலிகாப்டர் மூலம் உதகை சென்றிருந்தார்.

மாநாட்டில் பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி, நாம் உயர் கல்வி மாணவர் சேர்க்கையில் சராசரியை விட அதிகமாக இருக்கிறோம். 6500க்கும் மேற்பட்டோர் பிஎச்டி படிக்கிறார்கள். ஆனால், அவர்கள் யாரும் யுஜிசி நெட் என்ஆர்எஃப் தேர்வில் தேர்ச்சி பெற முடியவில்லை.

அதுபோல, ஏஐஎஸ்இஆர் அறிக்கையின்படி, தனியார் பள்ளிகளில் மாணவர்கள் சிறப்பாக படிக்கிறார்கள். ஆனால், அரசுப் பள்ளிகளில் கல்வித் தரம் மோசமாக உள்ளது என்று கூறியுள்ளார்.

மேலும், ஆளுநர் நடத்தும் துணைவேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்கக் கூடாது என்று துணைவேந்தர்கள் மிரட்டப்பட்டுள்ளனர். கல்வியின் வளர்ச்சிக்காக நடத்தப்படும் இந்த மாநாட்டில் மாநில அரசின் பல்கலை துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை.

துணைவேந்தர்களின் கதவை நள்ளிரவில் தட்டி கூட்டத்தில் பங்கேற்றால் வீடு திரும்ப முடியாது என மிரட்டப்பட்டுள்ளனர். சில துணைவேந்தர்கள் உதகைக்கு வந்தும்கூட, மாநாட்டில் பங்கேற்கவில்லை. இதுபோன்று ஒரு அசாதாரண சூழல் முன்னெப்போதும் ஏற்பட்டது இல்லை என்றும் ஆளுநர் ஆர்.என். ரவி பேசியிருக்கிறார்.

முன்னதாக, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி நடத்தும் துணைவேந்தர்கள் மாநாட்டை அரசு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் புறக்கணித்துள்ளனர். தமிழகத்தில் உள்ள 52 பல்கலைக்கழகங்களில் 34 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்றுள்ளதாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்திருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.