தமிழ்நாட்டில் புதுமணத் தம்பதிகள் 3-வது குழந்தை பெற்றுக்கொள்ள அரசு சலுகை வழங்க வேண்டும் என திமுக எம்எல்ஏ மதியழகன் பேரவையில் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடு முழுவதும் மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு தமிழகம், கேரளம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்தால் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் நாடாளுமன்றத் தொகுதிகள் குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மத்திய அரசின் கோரிக்கைக்கு ஏற்ப, முன்னதாக மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திய மாநிலங்கள் தற்போது பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தொகுதி மறுசீரமைப்பால் தமிழகம் பாதிக்கப்படும் என்று கூறி தமிழ்நாட்டில் 3-வது குழந்தை பெற்றுக்கொள்ள முன்வரும் பெற்றோருக்கு அரசு சலுகை வழங்க வேண்டும் என பர்கூர் தொகுதி திமுக எம்எல்ஏ மதியழகன் பேரவையில் இன்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சர் பதிலளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக தொகுதி மறுசீரமைப்பை மத்திய அரசு 25 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தாா்சாலை, சிறு பாலங்கள் அமைக்கக் கோரி எம்எல்ஏவிடம் மனு

தொகுதியில் புகாா் தெரிவிக்க க்யூஆா் கோடு

3வது குழந்தை பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்க வேண்டும்! அரசுக்கு கோரிக்கை!

கோவில்பட்டி ஒன்றிய பகுதியில் எம்எல்ஏ நன்றி தெரிவிப்பு
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



