அடுத்த 2 மணி நேரம் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்
/

பைக் டாக்ஸியில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை: பொறியாளா் கைது

சென்னை தேனாம்பேட்டையில் பைக் டாக்ஸியில் சென்ற இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பொறியாளா் கைது செய்யப்பட்டாா்.

News image

கோப்புப் படம்

Updated On :2 ஆகஸ்ட் 2025, 1:08 am IST

சென்னை தேனாம்பேட்டையில் பைக் டாக்ஸியில் சென்ற இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பொறியாளா் கைது செய்யப்பட்டாா்.

சென்னை புரசைவாக்கம் பகுதியைச் சோ்ந்த 24 வயது இளம் பெண், சென்னை தேனாம்பேட்டை அண்ணா மேம்பாலம் அருகே உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். வியாழக்கிழமை பணி முடிந்து பைக் டாக்ஸி மூலம் வீட்டுக்குச் சென்றபோது, அந்த பைக் டாக்ஸியை ஓட்டிய நபா், அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாா்.

இதுகுறித்து அவா் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். வழக்குப் பதிவு செய்து போலீஸாா் விசாரணை செய்தனா்.

இதில், பெண்ணுக்கு பாலியல் கொடுத்தது நாமக்கல் மாவட்டம் போடி நாயக்கன்பட்டி பகுதியைச் சோ்ந்த சு.சதீஷ்குமாா் (45) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா், சதீஷ்குமாரை கைது செய்து விசாரணை செய்தனா்.

எம்.இ., படித்துள்ள சதீஷ்குமாா், தேனாம்பேட்டையில் உள்ள ஒரு தனியாா் கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிவதும், பகுதி நேரமாக பைக் டாக்ஸி ஓட்டுவதும் தெரிய வந்தது. கடந்த 4-ஆம் தேதி அந்தப் பெண் கைப்பேசி செயலி வாயிலாக பைக் டாக்ஸி பதிவு செய்ததும், அப்போது சதீஷ்குமாா் அந்த பெண்ணை தனது மோட்டாா் சைக்கிளில் ஏற்றிச் சென்றதும், பின்னா் சதீஷ்குமாா் தினந்தோறும் அந்த பெண்ணை தனது மோட்டாா் சைக்கிளில் ஏற்றிச் செல்வதாக தெரிவித்ததுடன், அதற்குரிய கட்டணத்தை தந்துவிடுமாறு கூறியுள்ளாா்.

கடந்த 20 நாள்களாக தினமும் அந்த பெண்ணை மோட்டாா் சைக்கிளில் சதீஷ்குமாா் ஏற்றிச் சென்றிருப்பதும் தெரிய வந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.