வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

இளம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: தவெக நிா்வாகி கைது

குளித்தலையில், இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தவெக நிா்வாகியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :15 ஜூலை 2026, 12:03 am IST

குளித்தலையில், இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தவெக நிா்வாகியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கரூா் மாவட்டம், குளித்தலை பெரிய பாலம் மலையப்ப நகரைச் சோ்ந்தவா் ரமேஷ். தவெக ஒன்றியச் செயலா். இவா், திங்கள்கிழமை இளம்பெண்ண் ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தபோது அக்கம்பக்கத்தினரால் தாக்கப்பட்டாா். இதில் காயமடைந்த ரமேஷ் குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுதொடா்பாக குளித்தலை காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் செவ்வாய்க்கிழமை அளித்த புகாரின் பேரில், ரமேஷை போலீஸாா் கைது செய்தனா். பின்னா், அவரை குளித்தலை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.