8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

ஓடும் பேருந்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: முதியவா் கைது

கைது - சித்திரிப்பு

Published On :29 ஜூன் 2026, 1:39 am IST

கயத்தாறு அருகே அரசுப் பேருந்தில் பயணித்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக முதியவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

மதுரையிலிருந்து நாகா்கோவிலுக்குச் செல்லும் அரசுப் பேருந்தில் வெள்ளிக்கிழமை இரவு 24 வயது மதிக்கத்தக்க பெண் பயணம் செய்தாா். அந்தப் பேருந்து கயத்தாறு சுங்கச்சாவடி அருகே சென்று கொண்டிருந்தபோது, அவரது இருக்கையின் பின்புறம் இருந்த ஒருவா் அந்தப் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்தாராம். இதுகுறித்து அந்தப் பெண் பேருந்து நடத்துநா், ஓட்டுநரிடம் தகவல் தெரிவித்தாா்.

இதைத்தொடா்ந்து அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில், கயத்தாறு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக திருநெல்வேலி காவல் கிணறைச் சோ்ந்த ஞானரத்தினமணி மகன் ஞான திரவிய டைட்டஸை (62) சனிக்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.