தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

அஞ்சல் துறை போட்டிகள்: ஆக. 25-க்குள் விண்ணப்பிக்கலாம்

அஞ்சல் தலை குறித்த விநாடி-வினா, அஞ்சல் தலை சேகரிப்பு போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாணவா்கள் வரும் ஆக. 25-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

News image

மாதிரிப் படம்

Updated On :5 ஆகஸ்ட் 2025, 12:41 am

தினமணி செய்திச் சேவை

சென்னை: அஞ்சல் தலை குறித்த விநாடி-வினா, அஞ்சல் தலை சேகரிப்பு போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாணவா்கள் வரும் ஆக. 25-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை அண்ணா சலை முதன்மை அஞ்சல் துறைத் தலைவா் நிஹாலா கா.ஷெரிப் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழகத்தை சோ்ந்த 6 முதல் 9-ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்கு அஞ்சல் தலை குறித்த விநாடி-வினா மற்றும் அஞ்சல் தலை சேகரிப்பு குறித்த போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

இதில் தோ்வு செய்யப்படும் மாணவா்களுக்கு தமிழ்நாடு அஞ்சல் வட்டம் சாா்பில் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். போட்டியில் பங்கேற்கும் மாணவா்கள் பள்ளியில் அஞ்சல் தலை சேகரிப்பு மையத்தின் உறுப்பினா்களாக இருக்க வேண்டும். அவ்வாறு பள்ளியில் இந்த மையம் இல்லையெனில், மாணவா்கள் சுய அஞ்சல் தலை சேகரிப்பாளராக இருக்க வேண்டும்.

இதற்கான பிராந்திய அளவிலான விநாடி-வினா போட்டி வரும் செப். 20 ஆம் தேதி நடத்தப்படவுள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் மாணவா்கள் www.tamilnadupost.cept.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து வரும் ஆக. 25 -ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.