மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

டிட்வா புயல்! சென்னையில் மாலை 4 மணி வரை இடைவிடாது மழை!

டிட்வா புயல் காரணமாக சென்னையில் மாலை 4 மணி வரை இடைவிடாது மழை பெய்யும் என அறிவிப்பு

News image
சென்னையில் மழை- ANI
Updated On :2 டிசம்பர் 2025, 8:16 am

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னை: சென்னை மற்றும் திருவள்ளூரில் இன்று மாலை 4 மணி வரை இடைவிடாத மிதமான மழை தொடர்ந்து பெய்து கொண்டிருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக் கடலில் உருவான டிட்வா புயல், வலுவிழந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி சென்னைக்கு அருகே நிலை கொண்டுள்ளது.

இதன் காரணமாக, சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இடைவிடாது பெய்து வரும் மழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படாத நிலையில், இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையே, திருவள்ளூர் மாவட்டத்துக்கு செவ்வாய்க்கிழமை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது. ஆனால் சற்று நேரத்தில், திருவள்ளூருக்கு விடுக்கப்பட்ட மிக அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டு, திருவள்ளூர், சென்னை உள்பட 5 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி வரை சென்னை, திருவள்ளூரில் இடைவிடாது மிதமான மழை பெய்யும். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டையிலும் இன்று மாலை வரை மிதமான மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், திருப்பத்தூர், கோவை, நீலகிரி, தேனி, தென்காசி, விழுப்புரம், மயிலாடுதுறையில் இன்று லேசான மழை பெய்யும்.

கடலூர், ராமநாதபுரம், நாகை, கிருஷ்ணகிரி, வேலூர், ஈரோடு, புதுச்சேரி, காரைக்காலிலும் இன்று லேசான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

Due to Cyclone Titva, Chennai will experience continuous rain till 4 pm.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.