யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

டிட்வா போல ஓயாத புயல்: சிவக்குமார், சித்தராமையா சந்திப்பு 2.0 ஏன்?

டிட்வா போல கர்நாடக பதவி சர்ச்சை ஓயாத நிலையில் சிவக்குமார், சித்தராமையா சந்திப்பு 2.0 இன்று நடந்துள்ளது பற்றி.

News image
முதல்வர் - துணை முதல்வர்
Updated On :2 டிசம்பர் 2025, 7:42 am

இணையதளச் செய்திப் பிரிவு

புது தில்லி: கர்நாடகத்தில், காங்கிரஸ் ஆட்சி இரண்டரை ஆண்டுகள் நிறைவு செய்திருக்கும் நிலையில், முதல்வருக்கும் துணை முதல்வருக்கும் இடையேயான 2.0 சந்திப்பு, டிட்வா போல புயல் ஓயவில்லை என்பதையே காட்டுவதாகக் கூறப்படுகிறது.

ஒரு சில நாள்களுக்கு முன்பு, முதல்வர் சித்தராமையாவின் அழைப்பின் பேரில், அவரது இல்லத்துக்கு துணை முதல்வர் டிகே சிவக்குமார் சென்று காலை உணவருந்திவிட்டு வந்தார்.

அப்போதே, கட்சியின் தலைமையின் கட்டளைக்கு இருவரும் கட்டுப்படுவோம் என்று ஒருமித்தக் குரலில் கூறியிருந்தார்கள். அப்போதைக்கு புயல் ஓய்ந்ததாகவே இது பார்க்கப்பட்டது. ஆனால், இன்று காலை மீண்டும் சித்தராமையா, சிவக்குமார் இல்லத்துக்குச் சென்றுள்ளார்.

இந்த சந்திப்பு, தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகி நிலை கொண்டிருக்கும் டிட்வா புயல் போல நீடிப்பதையே உறுதி செய்திருக்கிறது.

காங்கிரஸ் தொலைநோக்குப் பார்வையின் கீழ் நல்லாட்சி மற்றும் நமது மாநிலத்தின் நிலைத்த வளர்ச்சிக்கான எங்கள் ஒற்றுமையின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தவே முதல்வரை இன்று எனது இல்லத்தில் காலை உணவிற்கு அழைத்தேன் என்று சிவக்குமார், புகைப்படங்களுடன் பகிர்ந்துள்ளார்.

இது குறித்து சித்தராமையாவும், சனிக்கிழமை, என் இல்லத்துக்கு வந்த சிவக்குமார் என்னை அவரது இல்லத்துக்கு காலை விருந்துக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார் என்று கூறியிருந்த நிலையில் இன்று இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

இருவரும் கூட்டாக செய்தியாளர்களிடம் பேசிய போதும், நாங்கள் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம், இந்த பிரச்னை வெளியிலிருந்து கிளப்பிவிடப்பட்டது என்றுதான் இரு தலைவர்களும் கூறி வருகிறார்கள்.

சித்தராமையா பேசுகையில், காலை விருந்து சிறப்பாக அமைந்தது. இந்த குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க இருவரும் விரும்புகிறோம். எங்கள் நோக்கம் தெளிவாக இருக்கிறது. உள்ளாட்சித் தேர்தலே மிகவும் முக்கியம். 2028 தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை நோக்கி இருவரும் பயணிக்கிறோம். எங்களுக்குள் வேறுபாடு இல்லை. இப்போதும் இல்லை எப்போதும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

summary

Shivakumar, Siddaramaiah meeting 2.0 took place today as the controversy over Karnataka's post like Titva continues.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.